நான்கு லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே என கேள்வி ஆதரவும் கண்டனமும்

நான்கு லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே என கேள்வி ஆதரவும் கண்டனமும்

2 mins read
d154da59-c44c-488d-abc9-e8d06e886f58
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் 7 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள 2000 ரூபாய் நோட்­டு­கள் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தது. அதில், ஏறக்­கு­றைய 3 லட்­சம் கோடி மதிப்­புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இருப்­ப­தாக கூறி­யி­ருக்கிறார்­கள். மீத­முள்ள 4 லட்­சம் கோடி ரூபாய் நோட்­டு­கள் எங்கே மறைந்­தன என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இந்­தப் பணம் யார் மூலம் பதுக்­கப்­பட்­டுள்­ளது என்று அகில இந்­திய வங்கி ஊழி­யர்­கள் சம் மேள­னம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

இதற்கு ரிசர்வ் வங்­கி­யும், மத் திய அர­சும் பதி­ல­ளிக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ள­தாக அகில இந்­திய வங்கி ஊழி­யர்­கள் சம்­மே­ள­னப் பொதுச்­செ­ய­லா­ளர் சி.எச்.வெங்­க­டாச்­ச­லம் கூறி­யுள்­ளார்.

இந்­திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்­டு­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தாக கடந்த வெள்­ளிக் கிழமை இரவு அறி­வித்­தது.

புதிய 2000 ரூபாய் நோட்டு களை வைத்­துள்­ள­வர்­கள் செப் டம்­பர் 30ஆம் தேதிக்­குள் மாற்­றிக் கொள்­ள­லாம் என­வும் அது கூறியிருந்­தது. இந்த அறி­விப்பு பொதுமக்­கள், வியா­பா­ரி­கள் மத்­தி­யில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், ரிசர்வ் வங்­கி­யின் இந்த அறி­விப்­புக்கு வங்கி ஊழியர்­கள் சங்­கம் கடும் எதிர்ப்பு தெரி­வித்து 4 லட்­சம் கோடி ரூபாய் நோட்­டு­கள் மறைந்­தது எப்­படி என குற்­றச்­சாட்டும் வித மாக வினா எழுப்பியுள்ளன.

முன்­னாள் அமைச்­சர் ஜெய்­ராம் ரமேஷ்: ரூ.2000 நோட்­டு­களை திரும்­பப் பெறு­தல் என்­பது கோடிக்­க­ணக்­கான மக்­களை ஏமாற்­றும் செயல்.

டெல்லி முதல்­வர் அரவிந்த் கெஜ்­ரி­வால்: முத­லில் ரூ.2000 நோட்­டு­களைக் கொண்டு வரும்­போது ஊழலைத் தடுக்­கும் என்றனர். இப்­போது ஊழல் முடி­வுக்கு வரும் என்­கின்­ற­னர். ஏற்கமுடியாத செயல்.

முன்­னாள் ஆந்­திர முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு: ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்­டு­களைத் திரும் பப்பெறும் அறி­விப்பை வர­வேற்­கிறேன். ஊழல் குறையும்.