பிரதமர் மோடி: உலக நன்மைக்கு 'குவாட்' அமைப்பு பாடுபடும்

பிரதமர் மோடி: உலக நன்மைக்கு 'குவாட்' அமைப்பு பாடுபடும்

2 mins read
edb82c14-6b37-4705-9f52-0d9f28a8332c
-

எதிர்வரும் 2024ல் இந்தியாவில் இம்மாநாட்டை நடத்த நான்கு தலைவர்களும் இணக்கம்

ஹிரோ­ஷிமா: உலக நன்மை, மக்­கள் நலன், செழிப்பு, அமை­திக் கான முயற்­சி­களை முன்னெ டுப்­ப­தில் 'குவாட்' (நாற்­கர) கூட்­ட­மைப்பு தொடர்ந்து அக்­கறை காட்­டும் என பிர­த­மர் நரேந்­திர மோடி கூறி­யுள்­ளார்.

அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஜப்­பான் ஆகிய நான்கு நாடு­கள் இணைந்து 'குவாட்' அமைப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

ஜப்­பா­னின் ஹிரோ­ஷிமா நக­ரில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற 'குவாட்' மாநாட்­டில், பிர­தமா் நரேந்­திர மோடி, அமெ­ரிக்க அதிபா் ஜோ பைடன், ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­தமா் ஆன்­டனி அல்­பா­னீஸ், ஜப்­பான் பிர­தமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் பங்­கேற்­றனா்.

அப்­போது பேசிய பிர­த­மர் மோடி, "இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமைதி, நிலைத்­தன்மை, வளா்ச்சி ஆகி­ய­வற்றை உறுதி செய்­வ­தில் முக்­கிய மைய­மாக 'குவாட்' கூட்­ட­மைப்பு மாறி­யுள்­ளது," எனக் குறிப்­பிட்­டார்.

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தின் பாது­காப்பு இந்த ஒட்­டு­மொத்த உல­கத்­துக்­குமே மிக­வும் முக்­கி­ய­மா­னது என்று கூறிய பிர­த­மர் மோடி, மக்­கள் நலன், அனைத்­து­லக வளர்ச்சி, அமை­திக்கு குவாட் அமைப்பு தொடர்ந்து பாடு­படும் என்­றார்.

அடுத்த 2024ல் 'குவாட்' மாநாட்டை இந்­தி­யா­வில் நடத்­து­வ­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­க­வும் இதற்கு மற்ற தலை­வர்­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

தலை­வா்­கள் இணைந்து வெளி­யிட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யில், அனைத்து நாடு­களும் மற்ற நாடு­க­ளின் இறை­யாண்மை, வட்­டார ஒரு­மைப்­பாட்டை மதித்து நடக்கவேண்­டி­யது அவ­சி­யம். இந்தோ-பசி­பிக் வட்டாரத்தை சுதந்­தி­ர­மா­க­வும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னும் திக­ழச்செய்ய 'குவாட்' மீண்­டும் உறுதி ஏற்ப தாக­வும் பயங்­க­ர­வா­தத்­தின் அனைத்து கூறு­க­ளை­யும் குவாட் கூட்­ட­மைப்பு எதிர்ப்­ப­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.