சிறுமியின் கண்ணில் இருந்து வெளிவரும் அரிசி, தாள், துகள்

சிறுமியின் கண்ணில் இருந்து வெளிவரும் அரிசி, தாள், துகள்

1 mins read
7efe297d-88d9-4cf5-93f7-cbabcd323932
-

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா மாநி­லம், கிருஷ்­ண­பு­ரம் கிரா­மத்தைச் சேர்ந்த சுஜான்யா என்ற சிறு­மி­யின் கண்­ணி­லி­ருந்து கடந்த சில நாட்­க­ளாக அரிசி, தாள், நெகி­ழித் துணுக்­கு­, இரும்­புத் துகள் உள்­ளிட்ட பொருள்­கள் வெளி­வ­ரு­கின்­றன.

இதற்கு என்ன காரணம்? ஏன் இப்படி வரு­கிறது என சிறு­மி­யின் பெற்­றோரும் மருத்­து­வர்­களும் குழப்­பம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து, ஒன்றாம் வகுப்­பில் படித்து வரும் சிறுமி சுஜன்­யாவைக் கூலி வேலை செய்து வரும் அவரது பெற்றோர் கம்­மம் நக­ரில் உள்ள அரசு மருத்­து­வ­மனையில் சேர்த்துள்ளனர். மருத்­து­வர்­கள் சுஜான்யாவைச் சோதித்து வரு­கின்­ற­னர்.

சுஜன்­யா­வின் ஒரு கண்­ணி­லி­ருந்து மட்டும் கடந்த சில நாள் க­ளாக தின­மும் அரிசி, பிளாஸ்­டிக் துண்­டு­கள், பேப்­பர், இரும்புத் துகள்­கள் வெளி­வருவதால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.