பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் தாயைப் பிரிந்த 11 சிறுத்தைக்குட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. படம்: ஊடகம்
பெங்களூரு: பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு நரசிபுரா, மத்துார், ராம்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் 11 சிறுத் தைக் குட்டிகள் மீட்கப்பட்டு உள்ளன.
தாயை விட்டுப் பிரிந்து, விவசாய நிலங்களில் ஆதரவற்று திரிந்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டு பன்னர கட்டா பூங்காவில் விடப்பட்டு உள்ளன. பிறந்த சில நாள்களிலேயே தாையப் பிரிந்துள்ள 11 சிறுத்தைக் குட்டிகளுக்கும் பூங்காவின் மருத்துவ ஊழியர்கள் ஆட்டுப்பால் புகட்டி பராமரித்து வருகின்றனர்.
விருப்பமுள்ள பொதுமக்களும் பிராணி ஆர்வலர்களும் சிறுத்தைக் குட்டிகளைத் தத்து எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு அளித்துள்ளனர். 11 குட்டிகளையும் பச்சிளம் குழந்தையைப் போல் பராமரித்து வருவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

