ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி-20 மாநாடு நேற்று தொடங்கியது. சுற்றுலாத்துறை சார்ந்த பணிக் குழுவின் மூன்றாவது கூட்டம் இங்குள்ள ஷேர்-இ-காஷ்மீர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
சீனாவும் பாகிஸ்தானும் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்நிகழ்வை நடத்துவதைக் கண்டித்துள்ளன.
ஸ்ரீநகரில் நடைபெறும் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 180 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, மாநாட்டில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரஜோரியில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு எல்லையை ஒட்டிய செனாப் ஆற்றில் எல்லை பாதுகாப்புப் படையினர் இரவு-பகலாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜ ராத்திலும் 2வது கூட்டம் மேற்கு வங்காளத்திலும் நடைபெற்றன.

