எதிர்க்கட்சிகளைத் திரட்டும் ஆம்ஆத்மி

2 mins read
ae10d072-89ae-4b50-ae85-af2676e45537
-

பாஜக அரசின் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தலை­நகரான டெல்­லி­யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்­து­வ­ரு­கிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்­ரி­வால் முதல் அமைச்­ச­ராக இருந்து வரு­கி­றார்.

டெல்லி யூனி­யன் பிர­தே­சம் என்­ப­தால் முதல்­வ­ரை­விட துணை நிலை ஆளு­ந­ருக்கு அதி­கா­ரம் அதி­க­மாக இருந்து வந்­தது. இத­னால் கெஜ்­ரி­வா­லால் முக்­கிய முடி­வு­கள் எடுக்க முடி­யா­மல் இருந்­தது.

அப்­படி எடுத்­தா­லும் அதற்கு துணை­நிலை ஆளு­நர் முட்­டுக்­கட்­டை­யாக இருந்­தார். இத­னால் கெஜ்­ரி­வால் அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்தை நாடி­யது.

பத­வியை மாற்­று­வது மற்­றும் பதவி நிய­ம­னம் போன்­ற­வற்றை செய்ய முதல்­வ­ருக்கு முழு அதி­கா­ரம் உள்­ளது என உச்­ச­நீ­தி­மன்­றம் அதி­ரடி உத்­த­ரவை பிறப்­பித்­தது. இது மத்­திய அர­சுக்­குப் பெரிய சறுக்­க­லாக அமைந்­தது.

இத­னால் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்­பைக் குறைக்­கும் வகை­யில் நிர்­வாக உத்­த­ரவை மத்­திய அரசு கொண்டு வந்­துள்­ளது.

மேலும், நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத்­தி­ருத்­தம் கொண்­டு­வர இருப்­ப­தாக தெரி­கிறது. இத­னால், கெஜ்­ரி­வால் எதிர்க்­கட்­சி­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

இத­னால் மம்தா பானர்­ஜி­யின் உத­வியை நாட இருக்­கி­றார். இதன் முதற்­கட்­ட­மாக நேற்று முன்தினம் கோல்­கத்­தா­வில் மம்தா பானர்­ஜியை அர­விந்த் கெஜ்­ரி­வால் சந்­தித்­தார்.

அப்­போது, நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வந்­தால், அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து தங்­க­ளோடு துணை நிற்க வேண்­டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், மத்­திய அரசு அவ­ச­ரச் சட்­டம் பிறப்­பித்­தி­ருக்­கும் விவ­கா­ரத்­தில், ஆளும் ஆம் ஆத்மி அர­சுக்கு டெல்­லி­யின் எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ரஸ் தனது ஆத­ரவை தெரி­வித்­தி­ருக்­கிறது.

டெல்லி அர­சின் உய­ர­தி­கா­ரி­கள் பணி நிய­ம­னம், பணி­யிட மாற்­றத்­துக்கு ஆணை­யம் அமைத்து மத்­திய அரசு அவ­ச­ரச் சட்­டம் பிறப்­பித்­தி­ருக்­கும் விவ­கா­ரத்­தில், ஆளும் ஆம் ஆத்மி அர­சுக்கு டெல்­லி­யின் எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ரஸ் தனது ஆத­ரவை தெரி­வித்­தி­ருக்­கிறது.

டெல்­லி­யில் ஆளும் ஆம் ஆத்மி அர­சுக்­கும் மத்­திய பா.ஜ.க அர­சுக்­கும் இடையே பல்­வேறு விவ­கா­ரங்­களில் மோதல்­போக்கு நீடித்து வரு­கிறது.

டெல்லி அர­சின் பணி நிய­மன அதி­கா­ரத்தைக் குறைக்­கும் வகை­யில் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கும் இந்த அவ­ச­ரச் சட்­டம், உச்ச நீதி­மன்ற அவ­ம­திப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யில் இது­கு­றித்து கூறிய பீகார் முதல்­வர் நிதிஷ் குமார், "நடை­மு­றை­யி­லுள்ள சட்ட விதி­முறைகளை மாற்ற மத்­திய அரசாங்கம் கொண்டு வரும் இந்த சட்ட மசோதா மாநி­லங்­க­ள­வை­யில் நிறை­வே­றாது," என்று பேசி­யுள்­ளார். இந்த நிலை­யில், மத்­திய அர­சின் அவ­சர சட்­டம் குறித்து கலந்­தா­லோ­சிக்க எதிர்க்­கட்­சி­கள் ஒன்று திரண்டு மாபெரும் மாநாட்டை நடத்தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.