இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம்

இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம்

2 mins read
51271cf6-5b80-498b-b564-0de6399a22dc
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் இரு­மல் மருந்­து­களை ஏற்­று­மதி செய்­வ­தற்கு இனி தரச்­சான்­றி­தழ் தேவை என்று அந்­நாடு அறி­வித்­துள்­ளது.

2022ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இரு­மல் மருந்­து­க­ளால் உஸ்­பெ­கிஸ்­தா­னில் 18 குழந்­தை­களும் காம்­பி­யா­வில் கிட்­டத்­தட்ட 70 குழந்­தை­களும் உயி­ரி­ழந்­த­தாக அந்­நா­டு­கள் கூறி­யுள்­ளன. இதை உலக சுகா­தார நிறு­வ­னம் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் உறு­தி­செய்­தது.

காம்­பி­யா­வில் குழந்­தை­க­ளுக்கு கடு­மை­யான சிறு­நீ­ரக பாதிப்பு ஏற்­பட்­ட­தாக வெளி­வந்த செய்­தி­க­ளை­ய­டுத்து, இந்த மருந்­து­கள் கடு­மை­யான சிறு­நீ­ரக பாதிப்­புக்கு கார­ண­மாக இருக்­க­லாம் என்று உலக சுகா­தார அமைப்பு கூறி­யது.

இந்த மருந்­து­களில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத அள­வி­லான மாசுத்­தன்மை, டைஎ­தி­லீன் கிளை­கோல் மற்­றும் எத்­தி­லீன் கிளை­கோல் ஆகிய இரண்­டும் உள்­ளன என்று ஆய்­வகப் பகுப்­பாய்வு உறு­திப்­ப­டுத்­து­கிறது.

இரு­மல் மருந்­து­களை ஏற்­று­மதி செய்த நிறு­வ­ன­மான மெய்­டன் பார்­மா­சூட்­டி­கல்ஸ் நிறு­வ­னம், தாங்­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தரக்­கட்­டுப்­பாட்டு தர­நி­லை­யைக் கடைப்­பி­டிப்­ப­தாக கூறி­யது.

ஆனால், இந்த நிறு­வ­னம் தரக்­கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை மீறி­ய­தற்­கா­க­வும் கடை­பி­டிக்­கா­த­தற்­கா­க­வும் 2011, 2018, 2020, 2022 ஆகிய ஆண்­டு­களில் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இந்­நி­லை­யில் இனி இந்­தி­யா­வில் இருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் இரு­மல் மருந்­து­கள் அரசு ஆய்­வுக் கூடங்­களில் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மா­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த நடை­முறை அம­லுக்கு வரு­கிறது.

இது தொடர்­பாக வெளி­நாட்டு வர்த்­த­கம் இயக்­கு­ந­ர­கம் நேற்று வெளி­யிட்ட அறி­விக்­கை­யில், ஜூன் 1 2023 முதல் வெளி­நாட்­டிற்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் இரு­மல் மருந்­தின் மாதி­ரி­கள் அரசு ஆய்­வ­கத்­தில் சோதனை செய்­யப்­ப­டு­வது அவ­சி­ய­மாக்­கப்­ப­டு­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய அர­சின் ஆய்­வ­கங்­கள் சண்­டி­கர், கோல்­கத்தா, சென்னை, ஹைத­ரா­பாத், மும்பை, குவா­ஹாட்டி ஆகிய நக­ரங்­க­ளில் உள்­ளன. இவற்­றில் ஏதே­னும் ஒன்­றில் சோதனை செய்­யப்­பட்டு சான்­றி­தழ் பெறப்­பட வேண்­டும் என்­றும் அறி­க்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தங்­க­ளின் மருந்துத் தயா­ரிப்­பு­களை முறை­யாக மத்­திய அரசு ஆய்­வகங்­களில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­பதை அந்­தந்த மாநில அர­சு­கள் உறுதி செய்ய வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.