பங்ளாதேஷ் எல்லையில் ஏராளமான கைப்பேசிகள் பறிமுதல்

பங்ளாதேஷ் எல்லையில் ஏராளமான கைப்பேசிகள் பறிமுதல்

1 mins read
6ccd9688-bb7c-40fd-a6c1-ac3ba2b94b3f
-

அகர்­தலா: நாட்­டின் எல்­லைப் பகு­தி­களில் கடத்­தல்­க­ளைத் தடுக்­கும் வகை­யில் பாது­காப்­புப் படை­யி­னர் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது இந்­தியா - பங்­ளா­தேஷ் எல்­லை­யில் ஏரா­ள­மான கைப்­பே­சி­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

இந்­தியா, பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­க­ளுக்கு இடையே இயக்­கப்­படும் பேருந்தை அகர்­த­லா­வில் எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­னர் சோதனை செய்­த­போது, அதில் எண்­ணற்ற கைப்­பே­சி­கள் கடத்­தப்­ப­டு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

பேருந்­தில் வந்த பய­ணி­க­ளி­டம் நடத்­தப்­பட்ட சோத­னை­யில், பேருந்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த ஒரு தக­ரம் மட்­டும் அப்­போ­து­தான் பொருத்­தப்­பட்­டி­ருந்­தது போல இருந்­ததை அறிந்த படை வீரர்­கள், உட­ன­டி­யாக அந்­தத் தக­ரத்தை அகற்­றி­ய­போது, அதில் 665 கைப்­பே­சி­கள் இருந்­த­தைக் கண்­ட­றிந்­த­னர். உட­ன­டி­யாக, ஓட்­டு­ந­ரும் நடத்­து­ந­ரும் கைது செய்­யப்­பட்டு காவல்­நி­லை­யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.