கிரிக்கெட் வீரருக்கு அரசு வேலை வழங்க ரூ.2 கோடி லஞ்சம்

கிரிக்கெட் வீரருக்கு அரசு வேலை வழங்க ரூ.2 கோடி லஞ்சம்

2 mins read
34591c90-1694-4ae7-b075-4f49a46dd083
-

சங்­கு­ரூர்: கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசாங்க வேலை கொடுப்பதற்கு ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. அந்த வீரரிடம் லஞ்சம் கேட்டவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு நெருங்கிய உறவினர் என்று இப்போதைய முதல்வர் பகவந்த் மான் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

பஞ்­சாப்­பின் சங்­கு­ரூர் மாவட்­டத்­தின் திர்பா மற்­றும் சீமா ஆகிய பகு­தி­களில் அரசு அலு­வ­லக வளா­கங்­கள் கட்­டு­வ­தற்கு முதல்­வர் பக­வந்த்­மான் நேற்று முன்தினம் அடிக்­கல் நாட்­டி­னார்.

அப்போது பேசிய முதல்வர் பகவந்த்மான், "இரண்டு நாள்க­ளுக்கு முன் தரம்­சாலா சென்­றி­ருந்­தேன். அப்போது பஞ்­சாப் அணி­யில் விளை­யா­டிய ஒரு கிரிக்­கெட் வீரரைச் சந்­தித்­தேன்.

"அவர் பஞ்­சாப் தேர்­வா­ணை­யம், அதி­காரி பணி­க­ளுக்கு நடத்­திய போட்­டித் தேர்வை எழு­தி­யுள்­ளார். ஆனால், அவ­ரால் அதிக மதிப்­பெண்­கள் பெற முடி­ய­வில்லை.

"தேசி­ய­ள­வில் விளை­யாடிய வீரர் என்பதால், விளை­யாட்டு வீர­ருக்­கான இட ஒதுக்­கீட்­டில் வேலை­பெற முடிவு செய்­தார்.

"முன்­னாள் முதல்­வர் அம­ரிந்­தர் சிங் ஆட்சிக் காலத்­தில், அவ­ருக்கு வேலை ­அ­ளிப்­ப­தாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அம­ரிந்­தர் சிங் பதவி வில­க­லுக்­கு சரண்­ஜித் சிங் சன்னி முதல்­வ­ரா­னார்.

"இதை­ய­டுத்து அந்த விளை­யாட்டு வீரர் சரண்­ஜித் சிங் சன்­னியைச் சந்­தித்து வேலை கேட்­டுள்­ளார். அவர் தனது நெருங்­கிய உற­வி­னரான பூபேந்­தர் சிங் ஹனியை பார்க்­கும்­படி கூறி­யுள்­ளார். பூபேந்­தர் சிங் ஹனி ரூ.2 கோடி லஞ்­சம் கேட்­டுள்­ளார்.

"ஆனால், எனது அரசு 29,000க்கும் மேற்­பட்ட அரசு வேலை­களை மெரிட் அடிப்­ப­டை­யில் வழங்­கி­யுள்­ளது. கோது­மைக்­கான விலை மதிப்பை மத்­திய அரசு குறைப்­பது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. தேசிய உணவுக் கிடங்­கு­களை நிரப்ப கோதுமை மற்­றும் அரி­சியை மத்­திய அரசு கோரும்­போது, விவ­சா­யி­கள் மீது விதிக்­கப்­பட்ட விலைக் குறைப்பு வட்­டி­யு­டன் சேர்த்து வசூ­லிக்­கப்­படும். பஞ்­சாப் விவ­சா­யி­க­ளி­டம் மத்­திய அரசு வேறு­பாட்­டு­டன் நடந்­து­கொள்­வதை பொறுத்­துக்­கொள்ள முடி­யாது. இது­போன்ற மோச­மான முடி­வு­க­ளால், மத்­திய-மாநில அர­சு­க­ளின் உற­வு­கள் கடு­மை­யாகப் பாதிக்­கின்­றன," என்றார் அவர்.