டெல்லி-டேராடூன் வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும்.
புதுடெல்லி: ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ள வேளையில் டெல்லி மற்றும் டேராடூன் இடைேய முதல் ரயில் சேவை மே 29ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஐஆர்சிடிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 302 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துஉள்ள டேராடூனுக்கு நான்கு மணி 45 நிமிடங்களில் சென்றடையும். வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.
டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் பயணச்சீட்டு விலை ரூ. 1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் பயணச் சீட்டின் விலை ரூ. 1890 ஆகும். இந்த ரயில் ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இருந்து 17.50 (மாலை 5.50) மணிக்குப் புறப்பட்டு டேராடூனுக்கு 22.35 (இரவு 10.35) மணி அளவில் சென்றடையும். டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ஆனந்த விகார் ரயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். தற்போதைய நிதியாண்டில் ஆறு வந்தே பாரத் ரயில்கள் ராணி கமலாபேட்-ஹசரட் நிசாமுதீன், செகந்தராபாத்- திருப்பதி, சென்னை - கோயம்புத்தூர், அஜ்மீர்- டெல்லி கண்டோன்மெண்ட், திருவனந்தபுரம் செண்ட்ரல்-காசர்கோட், ஹவுரா- பூரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.