கேரளாவில் தமிழக மாணவர்கள் காயம்

கேரளாவில் தமிழக மாணவர்கள் காயம்

1 mins read
85bd3094-2eb5-466c-a95c-034d26e6847c
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­திற்­குச் சுற்­றுலா சென்ற நாமக்­கல் பகு­தியை சேர்ந்த ஐடிஐ மாண­வர்­கள் விபத்­தில் சிக்கி காயம் அடைந்­த­னர்.

திரிச்­சூர் மாவட்­டம், பாலக் காடு எர்­னா­வ­ரம் நெடுஞ்­சாலை யில் உள்ள சுங்­கச்­சா­வடி அருகே பழு­தாகி நின்ற லாரி மீது சுற்­று லா பேருந்து அதிகாலை 4 மணி அள­வில் மோதி­யது. இந்­தப் பயங்­கர விபத்­தில் பேருந்­தில் பய­ணித்த நாமக்­கல் ஐடிஐ மாண­வர்­கள் மற்­றும் பேருந்து ஓட்­டு­னர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

ஓட்­டு­நர் தூக்­கத்­து­டன் பேருந்தை ஓட்­டி­ய­தால் விபத்து நேர்ந்­தி­ருக்­க­லாம் என்று நம்­பப் படு­கிறது.

விபத்­தில் பேருந்து ஓட்­டு­நர் பேருந்­தின் இடி­பா­டு­க­ளுக்­குள் சிக்­கிக் கொண்­டார்.

அவரை மீட்­ப­தில் சிர­மம் ஏற்­பட்­டது. தீய­ணைப்­புத்­து­றை­யி­னர் கடும் முயற்­சி­க­ளுக்­குப் பிறகு ஓட்­டு­நரை மீட்டு மருத்­துவமனை­யில் சேர்த்­த­னர்.

மேலும் படு­கா­ய­ம­டைந்த ஐந்து பேர் தனி­யார் மருத்­து­வ­மனை யிலும் 18 பேர் திரிச்­சூர் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­துவ மனை­யி­லும் சேர்க்­கப்­பட்­ட­னர்.

மாண­வர்­க­ளின் உயி­ருக்கு எந்­த­விதப் பாதிப்­பும் இல்லை என்று காவல்­து­றை­யி­னர் கூறி உள்­ள­னர்.