ஒன்றுமில்லாத தம்பதியிடம் உழைப்பிருக்க குறையில்லை

ஒன்றுமில்லாத தம்பதியிடம் உழைப்பிருக்க குறையில்லை

3 mins read
0dd458a1-212b-419e-b4e8-d4d14495a69d
-
multi-img1 of 3

உறவோ, வீடோ, சொத்தோ, சுகமோ எதுவுமே கிடையாது. எங்களுக்கு நாங்களே துணை. நாளும் 20 கிலோமீட்டர் நடந்து பிளாஸ்டிக் பொருள்களைப் பொறுக்கி விற்றுப்பிழைக்கும் எங்களுக்கு உழைப்பே மூலதனம் என்கிறார்கள் சுப்பிரமணியன்-புஷ்பவள்ளி தம்பதியர்.

வயது என்ன என்­பதுகூடத் தெரி­யா­மல் உழைத்துப் பிழைக்க வேண்­டிய நிலை­யில் இருக்­கும் ஒரு தம்­ப­தியைச் சந்­திக்க நேர்ந்­தது. சுப்­பி­ர­ம­ணி­யன்-புஷ்­ப­வள்ளி என்ற இந்­தத் தம்­ப­தி­ய­ருக்கு அவர்­க­ளின் வயது சரி­யாகத் தெரி­ய­வில்லை; நேரம் கால­மும் தெரி­ய­வில்லை.

சொத்தில்லை, சொந்தமில்லை, கடனில்லை, கவலையும் இல்லை.

இந்­தத் தம்­ப­தி­ய­ருக்கு மூன்று பிள்ளை­கள் இருந்­தும் அவர்­கள் திருமணம் முடித்து பெற்­றோ­ரைக் கைவிட்­டு­விட்­டார்­கள். ஒரு குளத்­தங்­கரை அருகே சிறிய இடத்தை பஞ்­சா­யத்து நிர்­வா­கம் இவர்­கள் குடி­யி­ருக்க கொடுத்து இருக்­கிறது.

இவர்­க­ளுக்­குப் பிறகு அந்த இடத்தை நிர்­வா­கமே எடுத்­துக்­கொள்­ளும்.

படுதா, தார்­பாய், சுவ­ரொட்டி, துணி­மணிகளைக் கொண்டு மூடப்­பட்டு இருக்­கும் அந்த வீட்­டில்­தான் இத்­தம்­பதியர் குடி­யி­ருக்­கி­றார்­கள். வீட்­டில் மின்­சாரம் கிடை­யாது. தண்­ணீர் கிடை­யாது. வீட்டிற்­குக் கத­வும் கிடை­யாது.

இத்­தம்­ப­தி­யரை மாப்­ப­டுகை என்ற ஊரில் ஒரு பழைய இரும்­புக் கடை­யில் பார்த்­தேன். அங்கு பழைய பிளாஸ்­டிக் பொருள்­கள், பீர் போத்­தல்­களை இவர்­கள் எடைக்குக் கடைக்­கா­ர­ரி­டம் விற்­றுக்கொண்டு இருந்­தார்­கள்.

"எங்­க­ளி­டம் மூன்று சக்­கர சைக்­கிள் வண்டி ஒன்று இருக்­கிறது. முதல் நாள் உண­வைக் கையில் எடுத்­துக்­கொண்டு சூரி­யன் வந்­த­வு­டன் வண்­டி­யைத் தள்­ளிக்­கொண்டு கிளம்­பி­வி­டு­வோம்," என்று சொன்ன திரு­வாட்டி புஷ்பவள்ளி­யி­டம் எத்­தனை மணிக்­குக் கிளம்­பு­வீர்கள் என்று கேட்­ட­போது மணியெல்­லாம் எங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று சொல்­லி­விட்­டார்.

"எங்­கள் வீடுள்ள சித்­தர்­காடு என்ற ஊரில் இருந்து கிளம்பி மயி­லா­டு­துறை நகரை நோக்கிச் சந்­து­பொந்­து­கள் வழியாக, காவிரி ஆற்­றங்­கரை ஓர­மாகச் சென்று பிளாஸ்­டிக் பொருள்­க­ளைப் பொறுக்­கு­வோம்.

"பொருள்­கள் சேர சேர வண்­டி­யில் அள்­ளிப் ­போட்­டுக்கொள்­வோம். உயிரைப் பண­யம் வைத்­துத்­தான் பாடு­ப­டு­கிறோம். பிளாஸ்­டிக் பொருள்­கள் கிடக்­கும் ஆள்­ந­ட­மாட்­ட­மில்­லாத இடங்­களில் எல்­லாம் நல்ல பாம்­பு­கள், பூச்சிகள் திரி­யும்," என்­றார் திரு சுப்­பி­ர­ம­ணி­யன்.

"நடுவே எங்­கே­யா­வது மரத்­த­டி­யில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வோம்; டீக்­க­டை­யில் டீ வாங்கிக் குடிப்­போம். சேக­ர­மா­கும் பொருள்­க­ளோடு மாப்­படு­கை­யில் இருக்­கக்­கூ­டிய இந்­தப் பழைய இரும்புக் கடை­யில் எடைக்­குப் போடு­வோம்," என்று கூறிய திரு சுப்­பி­ர­ம­ணி­யன், பிளாஸ்­டிக் பொருள்­களை கிலோ 20 ரூபாய்க்குப் போட்டு நாளுக்குச் சரா­சரி­யாக ரூ.400 சம்­பா­திப்­போம் என்­றார்.

"எங்­க­ளுக்கு குடும்ப அட்டை இருக்­கிறது. போதிய அள­வுக்கு எங்­களுக்கு அரிசி கிடைத்­து­வி­டும். வாரம் ஒருமுறை ஒரு லிட்­டர் டீசல் வாங்கி வீட்டில் இரண்டு விளக்கு எரிய வைத்­துக்கொள்­வோம்.

"வழி­யில் பிளாஸ்டிக் பொருளுடன் மரக்­கட்­டை­க­ளை­யும் பொறுக்கி வரு­வோம். அவற்றை விற­கா­கச் சமை­யலுக்கு வைத்­துக்கொள்­வோம். இப்­படித்­தான் எங்­கள் காலம் ஓடு­கிறது," என்று என்னிடம் திரு­வாட்டி புஷ்­ப­வள்ளி கூறி­யதை ஆமோ­தித்த திரு சுப்­பி­ர­மணி­யன், தங்­கள் வாழ்க்­கை­யில் எந்­தக் குறை­யும் இல்லை என்­றார்.

"ஒரு பைசா கட­னில்லை, கவ­லை­யில்லை. என் மனை­விக்கு நான்தான் துணை. எனக்கு அவள்­தான் துணை, " என்றார் அவர்.

தம் கணவர் கூறி­ய­தைக் கேட்ட திருவாட்டி புஷ்­ப­வள்ளி, "எங்­க­ளுக்கு வாயும் வயிறும் வெவ்­வே­றாக இருப்­ப­தால்­தான் நாங்­கள் இரு­வ­ரும் தனித்­த­னி­யா­கச் சாப்­பி­டு­கி­றோம். இல்லை என்­றால் அவர் சாப்­பிட்­டால் எனக்கு வயிறு நிரம்­பி­வி­டும். அல்­லது நான் சாப்­பிட்­டால் அவ­ருக்கு வயிறு நிரம்­பி­வி­டும்," என்­றார்.

"மழைக்­கா­லத்­தி­லும் சில பிளாஸ்­டிக் பொருள்­க­ளைச் சேக­ரிக்­கச் செல்­வோம். உடம்பு சரி­யில்லை என்­றால் இருக்கவே இருக்கிறது அரசு மருத்­து­வ­ம­னை. அங்கு சென்று மருந்து வாங்கி வரு­வோம்," என்று திரு சுப்­பி­ர­ம­ணி­ய­னும் அவ­ருடைய மனை­வி­யும் மாறி மாறிக் கூறி­னர்.

வாழ்க்­கை­யில் எது இருந்து என்ன, எது இல்லை என்­றால் என்ன? நல்ல வாழ்க்கைத்துணை, நல்ல உடல் நலம், மன­நி­றைவு, மன மகிழ்ச்சி நாலும் இருந்­தால் பதினாறும் பெற்ற பெரு­வாழ்­வு­தான் என்ற சிந்­தனை இந்தத் தம்­ப­தி­யைக் கண்­ட­தும் என் மனத்­தில் உதித்­தது.