தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைகளைத் திருடி விற்கும் கும்பல்

2 mins read
93ce05a0-a069-4c3b-b19d-cf513e9f9246
-

புது­டெல்லி: ஐம்­பது குழந்தை களுக்கு மேல் திருடி நான்கு மாநி­லங்­களில் விற்­பனை செய்த பத்து பேர் கும்­பலை உத்­த­ரப்­பி­ர­தேச காவல்­துறை முறி­ய­டித்­துள்­ளது.

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லம் வார­ணா­சி­யின் பேலு­பூ­ரில் இம்­மா­தம் 14ஆம் தேதி நான்கு வயது ஆண் குழந்தை காணா­மல் போனது.

சாலை­யோ­ரம் வசிக்­கும் குடும்­பத்­தி­னர் இர­வில் உறங்­கும்­போது குழந்தை திரு­டப்­பட்­டது.

குழந்­தை­யைப் பறி­கொ­டுத்த பெற்­றோர் பல­நாள் தேடி­யும் கிடைக்­கா­த­தால் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­த­னர்.

இதை­ய­டுத்து வார­ணாசி குற்­றப் பிரிவு உதவி ஆணையரான (ஏசிபி) சர­வ­ணன் எனும் தமி­ழர் நேரடி விசா­ர­ணை­யில் இறங்­கினார்.

வார­ணாசி நகர சாலை­களில் பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்­புக் கேமரா காட்­சி­களை அவர் ஆராய்ந்­தார்.

இதில், திரு­டப்­பட்ட குழந்­தையை காரில் கொண்­டு­சென்ற ஓட்­டு­நர் சிக்­கி­னார்.

அவ­ரி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில், 'ஷிக்கா' எனும் பெண் தலை­மை­யில் பெரிய திருட்­டுக் கும்­பல் செயல்­ப­டு­வது தெரிந்­தது. இதை­ய­டுத்து ஏசிபி சர­வ­ணன் தலை­மை­யி­லான சிறப்­புப் படை புல­னாய்­வில் இறங்­கி­யது.

உத்­த­ரப்­பி­ர­தே­சம், ஜார்க்­கண்ட், பீகார், ராஜஸ்­தான் ஆகிய மாநி­லங்­களில் இந்­தக் குழு விசா­ரணை நடத்­தி­யது. இதன் முடி­வில் குழந்­தை­களைக் கடத்தி நான்கு மாநி­லங்­களில் விற்­பனை செய்­யும் கும்­பல் சிக்­கி­யது. மூன்று பெண்­கள் உள்­ளிட்ட பத்து பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். கடந்த சில வரு­டங்­க­ளாக இவர்­கள் சுமார் 50 குழந்­தை­களை கடத்தி 4 மாநி­லங்­களில் விற்­பனை செய்­தி­ருப்­பது விசா­ர­ணை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

ஜார்க்­கண்­டின் ஒரு வீட்­டில் மறைந்­தி­ருந்த இக்­கும்­ப­லின் தலைவி ஷிக்­கா­வும் கைது செய்­யப்­பட்­டார்.

இவ­ரி­ட­மி­ருந்து வார­ணா­சி­யில் திரு­டப்­பட்ட மூன்று கைக்­கு­ழந்­தை­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

"திரு­டப்­பட்ட குழந்­தை­கள் ரூ. 2 லட்­சம் முதல் ஐந்து லட்­சம் வரை குழந்தை இல்­லா­த­வர் களுக்கு விற்­கப்­பட்­டுள்­ளது," என்று 'இந்து தமிழ் திசை' நாளி­தழுக்கு அளித்த பேட்­டி­யில் காவல்­துறை அதி­காரி சர­வ­ணன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பான விசா­ரணை தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது.

தமி­ழ­கத்­தின் ஸ்ரீரங்­கத்தை சேர்ந்த பொறி­யி­யல் பட்­ட­தாரி யான டி.சர­வ­ண­னுக்­குப் பாராட்­டு­கள் குவிந்து வருகின்­றன.