தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்க அரசியல் கட்சிகள் தீவிரம்

1 mins read
c8d14ae1-c3ba-44be-ac65-590526a3491a
-

புது­டெல்லி: வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­களை ஈர்க்க இந்­திய அர­சி­யல் கட்­சி­கள் பல்­வேறு வழி­களில் போராடி வரு­கின்­றன. இந்­திய தேசிய காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த ராகுல் காந்தி இம்­மா­தம் 29ஆம் தேதி அமெ­ரிக்­கா­வுக்­கான பய­ணத்­தைத் தொடங்­கு­கி­றார். அந்­தப் பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக இம்­மா­தம் 30ஆம் தேதி சான் ஃபிரான்­சிஸ்­கோ­வி­லும் ஜூன் 4ஆம் தேதி நியூ­யார்க்­கி­லும் புலம் பெயர்ந்த இந்­தி­யர்­க­ளைச் சந்­திக்­கி­றார். இந்­திய அர­சி­யல் கட்­சி­கள் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லுக்கு முன்­பாக வெளி­நாட்­டில் வாழும் 32 மில்­லி­யன் இந்­தி­யர்­களை ஈர்க்க உல­க­ள­வில் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன.

இதில் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் பார­திய ஜனதா கட்சி வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­களை தொடர்ந்து ஈர்த்து ஒரு நிலையான சூழலில் உள்­ளது.

கடந்த மே 23ஆம் தேதி சிட்­னி­யில் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­க­ளி­டையே பிர­த­மர் மோடி உரை­யாற்­றி­னார். காங்­கி­ரஸ் கட்­சி­யும் இது­போன்ற நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ படுத்தி வரு­கிறது.