தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வளர்ந்த நாடாக மாறுவதற்கு இணைந்து செயல்பட வேண்டும்

2 mins read
8a191b70-f9a6-4f26-99d5-7d3804ebaaac
-

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு வலியுறுத்து

புது­டெல்லி: 2047ஆம் ஆண்­டுக்­குள் இந்­தி­யாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்­டும் என்ற இலக்கை எட்ட மாநில அர­சு­கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்­பட வேண்­டி­யது அவ­சி­யம் என பிர­த­மர் நரேந்திர மோடி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இந்­தி­யாவின் வளர்ச்­சிக்கு மாநி­லங்­க­ளின் பங்கு முக்­கி­யம் என்­றும் அதே­வே­ளை­யில், மாநி­லங்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள், சவால்­களை ஆய்வு செய்து அதற்­கான உரிய நட­வ­டிக்கை நிதி ஆயோக் எடுக்­கும் என பிர­த­மர் மோடி உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

நிதி ஆயோக் அமைப்­பின் 8வது நிர்­வாக மன்­றக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அவர், மேலும் கூட்­டாட்­சியை வலு­வா­ன­தாக்க 'ஆஸ்­பி­ரே­ஷ­னல் டிஸ்ட்­ரிக்ட்ஸ் (ஏடிபி)' மற்­றும் 'ஆஸ்­பி­ரே­ஷ­னல் பிளாக்ஸ் புரோ­கி­ராம் (ஏபிபி)' உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­களை நிதி ஆயோக் அமைப்பு செயல்­ப­டுத்தி வரு­கிறது.

மத்­திய அரசு, மாநில அர­சு­கள், மாவட்ட நிர்­வா­கம் ஆகி­யவை கூட்டாகச் செயல்­ப­டு­வ­தால் ஏற்­படும் வலுவைப் பிர­தி­பலிப்­ப­தாக இந்த இரண்டு திட்­டங்­களும் அமைந்­துள்­ளன. எனவே, நிதி ஆயோக் அமைப்­பு­டன் மாநில மற்­றும் யூனி­யன் பிர­தேச அர­சு­கள் இணைந்து செயல்­பட வேண்­டும் என்று பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

மேலும் குறு, சிறு, நடுத்­தர தொழில் துறையை மேம்­ப­டுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யம், மாநி­லங்­கள் இடை­யி­லான உறவு, தூய்மை ஆகி­யவை குறித்­தும் பிர­த­மர் அறி­வு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே, நிதி ஆயோக் கூட்­டத்­தில் அர­விந்த் கேஜ்­ரி­வால் (டெல்லி), பக­வந்த் மான் (பஞ்­சாப்), சந்­தி­ர­சே­கர ராவ் (தெலுங்­கானா), நவீன் பட்­நா­யக் (ஒடிசா), நிதிஷ்­கு­மார் (பீகார்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்­கா­ளம்), மு.க.ஸ்டா­லின் (தமிழ் நாடு), பின­ராயி விஜ­யன் (கேரளா), அசோக் கெலாட் (ராஜஸ்­தான்), சித்­த­ரா­மையா (கர்­நா­டகா) ஆகிய பத்து மாநி­லங்­க­ளின் முதல்­வர்­கள் பங்­கேற்­க­வில்லை. இதற்கு அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் வெவ்­வேறு கார­ணங்­களை தெரி­வித்­துள்­ள­தாகக் கூறப்படுகிறது.

இது­கு­றித்து பார­திய ஜனதா கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும், முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான ரவி­சங்­கர் பிர­சாத் பேசு­கை­யில், "நாட்­டின் வளர்ச்­சிக்­கான ஒட்­டு­மொத்த நோக்­கம், கட்­ட­மைப்பு மற்­றும் அதற்கான வழியைத் தீர்­மா­னிப்­ப­தற்­கான முக்­கிய அமைப்­பாக நிதி ஆயோக் விளங்­கு­கிறது.

"இக்­கூட்­டத்­தில் சுமார் 100 விவ­கா­ரங்­கள் விவா­திக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், 10 மாநி­லங்­க­ளின் முதல்­வர்­கள் இதில் பங்­கேற்­க­வில்லை. தங்­கள் மாநி­லங்­க­ளின் குரலை ஒலிக்க அவர்­கள் தவ­றி­விட்­ட­னர். இது மிக­வும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது, பொறுப்­பற்­றது, மக்­கள் விரோ­த­மா­னது. நிதி ஆயோக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிக்­கும் முதல்­வர்­க­ளின் முடிவு முற்­றி­லும் பொறுப்­பற்ற செயல்," என்று சாடி­யுள்­ளார்.

பிர­த­மர் மோடிக்கு டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் எழு­திய கடி­தத்­தில், 'கூட்­டாட்­சித் தத்­து­வத்தை மத்­திய அரசு கேலிக்­கூத்­தாக்­கு­கிறது. இந்த நிலை­யில் நிதி ஆயோக் கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தால் என்ன பயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.