புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி

1 mins read
374a2107-2e2c-46e5-8ff2-469a1872ebaa
-

புது­டெல்லி: இந்­திய மல்யுத்த சம்­மே­ள­னத் தலை­வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷ­ன் சிங்குக்கு எதி­ரான பாலி­யல் குற்­றச்­சாட்­டில் நட­வ­டிக்கை எடுக்­கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்­க­னை­கள் கடந்த ஒரு மாத கால­மாக டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டம் நடத்தி வந்­த­னர். நேற்று புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் திறப்பு விழா நடை­பெற்ற நிலை­யில், மல்­யுத்த வீரர்­கள், வீராங்­க­னை­கள் தாங்­கள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கும் ஜந்­தர் மந்­தர் பகு­தி­யி­லி­ருந்து புதிய நாடா­ளு­மன்றக் கட்­ட­டம் வரை அணிவகுத்துச் செல்ல இருப்­ப­தாக முன்பு அறி­வித்­தி­ருந்­த­னர். அதன்­படி அவர்­கள் ஜந்தர்மந்­த­ரிலிருந்து புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை நோக்கி பேரணியாகச் சென்­ற­னர். அப்­போது அவர்­களைக் காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­ய­தால் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. அதை­ய­டுத்து மல்­யுத்த வீரர்­கள் சாலை­யில் குந்­தி­யி­ருப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அவர்­களை காவல்­து­றை­யி­னர் அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தி­னர். அதனையடுத்து புதிய நாடா­ளு­மன்­றத்­தைச் சுற்­றி­லும் பாது­காப்பு வலுப்­ப­டுத்­தப்­பட்டுள்ளது.

இந்­நி­லை­யில், பேர­ணி­யில் ஈடு­பட்ட மல்­யுத்த வீராங்­க­னை­கள், காவல்­துறை தங்­க­ளைத் தடுத்து நிறுத்­தி­யது மட்­டு­மின்றி, தங்­க­ளி­டம் தவ­றாக நடந்­து­கொண்­ட­தா­கக் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர். டெல்லி சிறப்­புக் காவல் படை­யின் ஆணை­யர் திபேந்­திர பதக், "நாங்­கள் எங்­கள் வீரர்­களை மதிக்­கி­றோம். ஆனால், புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் திறப்புவிழா­வுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய தடையை நாங்­கள் அனு­ம­திக்க மாட்­டோம்," என்று கூறி­யுள்­ளார்.