புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடம் 140 கோடி இந்தி யர்களுக்கும் பெருமை அளிப்ப தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழும் என்றார்.
இக்கட்டடம் இந்தியர்களின் விருப்பங்களை நிறைவேற்றும்விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாட்டை வல்லரசாக மாற்ற வழி காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, இது 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதனிடையே அதிபரைப் புறக்கணித்துவிட்டு நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

