தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்ணில் பாய்ந்தது 'ஜிஎஸ்எல்வி எஃப் 12' உந்துகணை

1 mins read
304b97ac-573f-4223-bd91-4a8c730934ce
-

ஸ்ரீஹ­ரி­கோட்டா: தரை, வான், கடல் வழிப் போக்­கு­வ­ரத்தைக் கண்­கா­ணிக்­கும் 'ஜி.எஸ்.எல்.வி' எஃப்12' உந்துகணை நேற்று காலை 10:42 மணிக்கு 'என்­வி­எஸ்-01' செயற்­கைக்­கோ­ளு­டன் வெற்­றி­க­ர­மாக விண்­ணில் பாய்ந்­தது.

ஆந்­திர மாநி­லம், ஸ்ரீஹரி கோட்­டா­வில் உள்ள சதீஷ் தவான் விண்­வெளி ஆய்வு மையத்­தின் இரண்­டா­வது தளம் வழி இந்த உந்து­கணை விண்­ணில் ஏவப்­பட்­டது.

இதன்­மூ­லம் கடல்­சார் இருப்­பி­டம், விவ­சாய நிலங்­களைக் கண்­ட­றி­தல், பேரி­டர் மேலாண்மை, கைப்பேசியில் உலவும் வசதி, அரசு நிறு­வ\னங்­கள், நிதி நிறு­வ­னங்­கள், மின்­துறை நிறு­வ­னங்­க­ள் ஆகியவற்றுக்குத் தேவை­யான தர­வு­க­ளைப் பெற­மு­டி­யும் எனவும் கூறப்­ப­டு­கிறது

இதில் 2,232 கிலோ எடை கொண்ட 'என்­வி­எஸ் 01' என்ற வழி­காட்டி செயற்­கைக்­கோள் அனுப்­பப்­பட்டு, புவி­நி­லைச் சுற்­றுப்­பா­தை­யில் 36,000 கிலோ­மீட்­டர் உய­ரத்­தில் நிறுத்­த­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

"முதல்­மு­றை­யாக உள்­நாட்­டுத் தொழில்­நுட்­பத்­தில் வடி­வமைக்­கப்­பட்ட அணுக் கடி­கா­ர­மும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தரை, கடல், வான்­வெளி போக்­கு­வ­ரத்தை செயற்­கைக்­கோள் கண்­கா­ணிக்­கும்," என இஸ்ரோ விஞ்­ஞா­னி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.