தரதரவென இழுத்துச்சென்று வீரர், வீராங்கனைகள் கைது

தரதரவென இழுத்துச்சென்று வீரர், வீராங்கனைகள் கைது

2 mins read
55e0eb23-a628-4858-869d-5bfa1ac8df95
-

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

புது­டெல்லி: புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை நோக்கி பேர­ணி­யா­கச் சென்ற மற்­போர் வீராங்­க­னை­க­ளைத் தர­த­ர­வென்று இழுத்­துச்­சென்று கைது செய்­தது டெல்லி காவல்­துறை.

மற்­போர் வீராங்­க­னை­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக எழுந்த புகாரை அடுத்து, இந்­திய மற்­போர் சம்­மே­ள­னத் தலை­வ­ரும் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலி­யு­றுத்தி மற்­போர் வீரர், வீராங்­க­னை­கள் கடந்த ஒரு மாத கால­மாக டெல்லி ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை நோக்கி முன்­னே­றிய வீராங்­க­னை­க­ளைக் காவ­லர்­கள் குண்­டுக்­கட்­டாகத் தூக்­கிச்­சென்று கைது செய்ததால் அந்த இடமே போர்க்­க­ள­மாக மாறி­யது.

ஒலிம்­பிக், உலக மற்­போர் போட்­டி­களில் பதக்­கங்­களை வென்­றுள்ள சாக் ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்­ரங் புனியா உள்­ளிட்ட வீரர் வீராங்­க­னை­கள், போராட்­டத்தை ஒருங்­கி­ணைத்­த­வர்­கள் என 700 பேர் மீது டெல்லி காவலர்கள் எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்­குப் பதிந்­துள்­ள­னர்.

இத­னி­டையே நாட்­டுக்­குப் பெருமை சேர்த்த வீராங்­க­னை­களைக் கைது செய்ததை தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், முன்­னாள் காங்­கி­ரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் உள்­ளிட்டோர் கண்டித்துள்­ள­னர்.

"போராட்­டம் நடத்­திய வீரர், வீராங்­க­னை­களை இழுத்­துச் சென்­றும் தூக்­கிச்சென்­றும் கைது செய்­தி­ருப்­பது கண்­டிக்­கத்தக்­கது. செங்­கோல் முதல்­நாளே வளைந்து­விட்­டது," என்று மு.க.ஸ்டா­லின் விமர்­சித்­துள்­ளார்.

மல்­யுத்த வீராங்­கனை சாக்‌ஷி மாலிக் வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், "பாலி­யல் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பிரிஜ்­பூ­ஷண் சிங் மீது வழக்­குப் பதிவு செய்ய ஏழு நாள்­கள் எடுத்­துக்­கொண்ட டெல்லி காவ­லர்­கள் அமை­தி­யா­க போராட்­டம் நடத்­திய எங்­கள் மீது வழக்­குப் பதிவு செய்ய 7 மணி நேரத்­தைக்­கூட எடுத்­துக்கொள்­ள­வில்லை. இந்­திய அரசு தனது விளை­யாட்டு வீரர்­களை நடத்­தும் விதத்தை இந்த உல­கம் பார்த்­துக்கொண்­டி­ருக்­கிறது," எனப் பதி­விட்­டுள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மல்­யுத்த வீராங்­கனை வினேஷ் போகத், கைது செய்­யப்­பட வேண்­டிய பிரிஜ் பூஷண் சிங் புதிய நாடா­ளு­மன்­றத்­தில் அமர்ந்­தி­ருப்­ப­தா­க­வும் தாங்­கள் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் ஆவே­ச­மா­கக் கூறி­னார்.

இந்திய மற்போர் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைதுசெய்யும்படி மற்போர் வீரர்கள் போராடிவரும் சூழலில், கோல்கத்தாவில் இந்திய மற்போர் வீராங்கனைகளை ஆதரித்து இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் செயல்பாட்டாளர்கள் முழக்கமிட்டனர்.

படம்: ஏஎஃப்பி