திருப்பதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்திய 16 பேர் கைது

திருப்பதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்திய 16 பேர் கைது

1 mins read
8afd2f47-972a-4e23-9685-d381a6b6f41a
-

ஆந்­திரா: திருப்­ப­தி­யில் ரூ.40 லட்­சம் மதிப்­புள்ள செம்­ம­ரக்­கட்­டை­களைக் கடத்­தி­ய­தாக இரு வேறு சம்­ப­வங்­களில் இரு தமி­ழர்­கள் உட்­பட 16 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கடப்பா மாவட்­டம், வாணி­பெண்டா வனப்பகு­திக்கு உட்­பட்ட திப்­பி­ரெட்­டிப்­பள்ளி பகு­தி­யில் திருப்­பதி செம்­ம­ரக்­க­டத்­தல் தடுப்பு அதி­ர­டிப்­படைக் காவ­லர்­கள் குழு­வாகச் சுற்­றுக்காவல் பணியில் ஈடுபட்டனர். அப்­போது அங்கு ​​சிலர் தோளி­லும் தலை­யி­லும் செம்­ம­ரக்­கட்­டை­க­ளைச் சுமந்­து­கொண்டு சென்று கொண்­டி­ருந்­த­னர்.

அவர்­க­ளைச் சுற்றி வளைத்த காவலர்கள் 16 பேரைக் கைது செய்­தனர். அவர்­க­ளி­டம் இருந்து 17 செம்­ம­ரக் கட்­டை­கள், ஒரு சரக்கு ஆட்டோ, இரு மோட்­டார் சைக்­கிள்­கள், 13 இரும்­புக் கோட­ரி­கள் உள்ளிட்டவற்றையும் பறி­மு­தல் செய்தனர்.

பிடி­பட்­ட­வர்­கள் அனந்­த­பு­ரம் மாவட்­டம், திரு­வண்­ணா­மலை அன்­ன­மய்யா மாவட்­டத்­தைச் சேர்ந்தவர்கள் என காவ­லர்­கள் தெரிவித்துள்ளனர்.