முறையான விசாரணை தேவை

முறையான விசாரணை தேவை

2 mins read
20fb971e-3a03-4c01-92f5-2f9a38ff3cb4
-

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து உலக மல்யுத்த சம்மேளனம்

புதுடெல்லி: பாலி­யல் புகா­ரில் சிக்­கி­யுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இந்­திய மல்­யுத்த சம்­மே­ள­னத் தலை­வ­ரு­மான பிரிஜ்­பூ­ஷண் சரண் சிங் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­த­தைக் கண்­டித்து அனைத்­து­ல­கப் போட்­டி­களில் நாட்­டிற்­காக வென்ற பதக்­கங்­களை கங்கை நதி­யில் வீசப்­போ­வ­தாக மல்­யுத்த வீராங்­க­னை­கள் நேற்று முன்­தி­னம் அறி­வித்­த­னர். பின்­னர் விவ­சா­யி­கள் சங்­கத்­தின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அந்த முடிவை அவர்­கள் கைவிட்­ட­னர் எனக் கூறப்­பட்­டது. அத்­து­டன் பிரிஜ்­பூ­ஷண் மீது நட­வ­டிக்கை எடுக்க மத்­திய அர­சுக்கு ஐந்து நாள் கெடு விதித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நீதி கேட்டு போராடி வரும் இந்­திய மல்­யுத்த வீராங்­க­னை­க­ளுக்கு ஆத­ர­வாக உலக மல்­யுத்த சம்மேளனம் கண்­டன அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. அதில், பாலி­யல் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் பிரிஜ்­பூஷண் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டா­தது ஏமாற்­றம் அளிப்­ப­தா­க­வும், அவருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் பார­பட்­ச­மின்றி முறையாக விசா­ரிக்­கப்­பட வேண்­டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. மேலும், அந்த அமைப்பு, மல்­யுத்த வீராங்­க­னை­க­ளுக்கு எப்­போதும் நாங்­கள் துணை­நிற்­போம் என்று சூளு­ரைத்­துள்­ளது.

"இந்த விவ­கா­ரத்­தில் முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். விளை­யாட்டு அமைச்சு விதித்­துள்ள 45 நாட்­கள் கெடு­வுக்­குள் இந்திய மல்யுத்த சம்மேளனச் செயற்­குழுத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும். தவ­றி­னால் இந்­திய மல்­யுத்த சம்­மே­ள­னத்தை இடை­நீக்­கம் செய்துவிட்டு, இந்­திய மல்­யுத்த வீரர்­கள் 'தனி' கொடி­யின் கீழ் போட்­டி­களில் விளை­யாட உலக மல்­யுத்த கூட்­ட­மைப்பு வழி­வகை செய்­யும்," எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்றும் உலக மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பிரிஜ்­பூ­ஷணை பத­வி­யில் இருந்து நீக்­கு­வ­தோடு அவ­ரைக் கைது செய்து சிறை­யில் அடைக்­க­வேண்­டும் எனக் கூறி பஜ்­ரங் புனியா உள்­ளிட்ட ஒலிம்­பிக் பதக்­கங்­களை வென்ற வீரர்­கள் கூட இந்­திய மல்­யுத்த சம்­மே­ளன நிர்­வா­கத்­திற்கு எதி­ராக டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் தொடர் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இத­னி­டையே குற்­றம் சாட்­டப்­பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்­பூ­ஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்­கு­கள் பதி­யப்­பட்­டன. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்­டத்­தின் கீழ் பதிவு செய்­யப்­பட்டு இருந்­தது.

மேலும் இந்த விவ­கா­ரத்தை விசா­ரிக்க அறு­வர் கொண்ட விசா­ர­ணைக் குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் அனைத்­து­லக ஒலிம்­பிக் சங்­கம், மல்­யுத்த வீராங்­க­னை­க­ளி­டம் காவல்­துறை­யி­னர் நடந்­து­கொண்ட விதம் குறித்து கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.