அமராவதி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மே 30ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார் (படம்). இதில் வரும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்கட்சியின் 25 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரசாந்த் கிஷோரின் குழுவினர் ஆந்திராவில் 175 தொகுதிகளிலும் தேர்தலுக்கு முந்தைய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதாகவும் இதில் ஆளும் கட்சியின் 25 சட்டமன்ற உறுப்பினர்களின் பணி திருப்திகரமாக இல்லை என்று அறிக்கை வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் வரும் 2024 தேர்தலில் இவர்கள் 25 பேருக்கும் 'சீட்' இல்லை என்பது திட்டவட்டமாகி உள்ளது.

