தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூர் கலவரம் பற்றி விசாரிக்க ஆணையம்

1 mins read
f6104e70-aa3f-4e85-a0df-d38757472161
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் வட­கிழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரில் நடந்­து­வ­ரும் கல­வ­ரம் பற்றி விசாரிக்க ஆணை­யம் அமைக்­கப்­ப­டு­வ­தாக உள்­துறை அமைச்­சர் அமித்ஷா அறி­வித்­துள்­ளார்.

அந்த மாநி­லத்­தில் வசிக்­கும் மேதேயி என்ற சமு­தாய மக்­கள் தங்­களைத் தாழ்த்­தப்­பட்­ட­வர்­கள் பிரி­வில் சேர்க்க வேண்­டும் என்று கோரி வரு­கி­றார்­கள்.

இந்த வழக்கை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம் இது தொடர்­பாக மத்­திய அர­சுக்­குப் பரிந்­துரை செய்­யு­மாறு மாநில அர­சுக்கு உத்­த­ர­விட்­டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்­ளிட்ட பழங்­கு­டி­யின மாண­வர் சங்­கம் சார்­பில் கடந்த 3ஆம் தேதி பேரணி நடந்­தது.

இத­னால் மேதேயி சமு­தா­யத்­தி­ன­ருக்­கும் பிற பழங்­கு­டி­யின சமு­தா­யத்­தி­ன­ருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

மாநி­லம் முழு­வ­தும் வன்­முறை பர­வி­யது. ராணு­வம் உள்­ளிட்ட பல­ ப­டை­யி­ன­ரும் குவிக்­கப்­பட்­ட­னர். கல­வ­ரத்­தில் இது­வரை 80க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர். வன்­முறை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு இயல்பு நிலை திரும்பி வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், உள்­துறை அமைச்­சர் அமித் ஷா சில நாள்­களுக்கு முன்­ன­தாக மணிப்­பூ­ருக்­குச் சென்­றார். பல தரப்­பு­க­ளோடு பல­வற்­றை­யும் ஆலோ­சித்­தார்.

மணிப்­பூர் கல­வ­ரம் தொடர்­பாக ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மை­யில் விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­பட்டு முழு­மை­யாக விசா­ரணை நடக்­கும்; மணிப்­பூர் தொடர்­பான ஆறு வழக்­கு­களை சிபிஐ விசா­ரிக்­கும்;

மணிப்­பூர் ஆளு­நர் தலை­மை­யில் அமை­திக்­ கு­ழு ஒன்றை மத்­திய அரசு அமைத்­துள்­ளது என செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறிய அமைச்­சர், விசா­ரணை பார­பட்­சம் இன்றி நடக்கும் என்றார்.