ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உலகின் முதல் முப்பரிமாண (3டி) கோவில் அமைய உள்ளது.
அங்குள்ள சித்திபேட்டை மாவட்டத்தில் சுமார் 30 அடி உயரத்தில், 3,800 சதுர அடி பரப்பளவில் இந்தக் கோவில் அமையும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிள்ளையார், சிவன், பார்வதி சன்னதிகளுடன் இந்தக் கோவில் கட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

