பெங்களூரு: மேகதாது விவகாரத்தை சகோதர பாசத்துடன் பேசித் தீர்க்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கர்நாடக அரசாங்கம் பரிசீலிக்கும் கனவுத் திட்டம் என்றார்.
"மழைக்காலத்தில் கர்நாடக அணைகள் தவிர தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், கல்லணை ஆகிய அணைகள் நிரம்பி, வீணாக பல நூறு டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் நீர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் இரு மாநிலங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.

