'சுற்றிலும் இருள்; நாலாபுறமும் ரத்தம்; மக்களின் மரண ஓலம்'

2 mins read
5ca41b32-dcd4-47e9-a7a6-ddcd9acecda2
-

பாலேஸ்­வர்: ஒடிசா மாநி­லம், பாலேஸ்­வர் மாவட்டம் அருகே தடம்­பு­ரண்ட ஹவ்ரா விைரவு ரயில் மீது அடுத்­த­டுத்து இரண்டு ரயில்­கள் மோதி­ய­தில் குறைந்­தது 288 பேர் உயி­ரி­ழந்­த­னர்; 800க்கும் மேற்­பட்­டோர் காய­முற்­ற­னர்.

இந்த விபத்து குறித்து விரி­வான உயர்­மட்ட விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­படும் என்று ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் உறு­தி­ அ­ளித்­துள்­ளார்.

விபத்­தில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பிய பய­ணி­கள் ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­திற்குப் பேட்டி அளித்­துள்­ள­னர். அவர்­க­ளது வர்­ணனை கேட்­போ­ரைக் கலங்­கச் செய்­வ­தாக உள்­ளது.

"ஷாலி­மா­ரில் இருந்து சென்­னைக்குத் தூங்­கி­ய­படி சென்று கொண்­டி­ருந்­தேன். எப்­படி ரயில் மோதி­யது என்றே தெரி­ய­வில்லை. விபத்து நடந்­த­போது பலத்த சத்­தம் கேட்­டது. 'ஸ்லீப்­பர்' பெட்­டி­யில் மேல் படுக்­கை­யில் இருந்­த­படி மின்­வி­சி­றி­யைக் கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொண்­டேன்.

"ரயி­லில் இருந்து கீழே இறங் கிய­போது, எல்­லோ­ரும் அங்­கும் இங்­கும் ஓடிக்­கொண்­டி­ருந்­த­னர். காப்­பாற்­றுங்­கள், உத­வுங்­கள் என்று பல­ரும் கத்­திக்­கொண்­டி­ருந்­த­னர். யாருக்­கா­வது உத­வ­லாம் என நினைப்­ப­தற்­குள், ரயி­லின் உண­வ­கம் தீப்­பி­டித்­து எரிந்தது. அத­னால் அங்­கி­ருந்து நாங்­கள் ஓடி­விட்­டோம்," என்று தெரி­வித்­துள்­ளார்.

அனு­பவ் தாஸ் என்ற பயணி தனது டுவிட்டர் பதிவில், "சுற்­றி­லும் இருள் சூழ்ந்­தி­ருந்­தது, குடும்­பம் குடும்­ப­மாக நசுக்­கப்­பட்­டிருந்தனர். கைகால்­கள் இல்­லாத உடல்­களைக் கண்டேன். நாலா­பு­ற­மும் இரத்­தக்­க­ளரி. நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இதை என் வாழ்­நா­ளில் ஒரு நாளும் மறக்­க­மு­டி­யாது," என்று நியூஸ் 18 ஊடகத்துக்கு அளித் துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

விபத்­தில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக தப்­பிய மற்­றொ­ரு­வர், "விபத்­தின்­போது 10 முதல் 15 பேர் என் மீது சரிந்­த­னர். நான் மனி­தக் குவி­ய­லின் அடிப்­ப­கு­தி­யில் இருந்­தேன். எனக்கு கையி­லும் பின்­னங்­க­ழுத்­தி­லும் பலத்த காயம் ஏற்­பட்­டது.

"எப்­ப­டியோ குவி­ய­லில் இருந்து மீண்டு வெளி­யில் வந்து பார்த்­த­போது என்­னைச்­சுற்றி கை கால்­கள் சிதைந்த நிலை­யில் கிடந்த உடல்­கள், துண்­டிக்­கப்­பட்ட கைகால்­கள், சிதைந்த முகங்களு­டன் உடல்­கள் கிடந்­தன," என அதிர்ச்சி வில­கா­மல் தெரிவித்­தார்.

விபத்­தில் உயி­ரி­ழப்­பு­கள் மேலும் அதி­க­ரிக்­கும் என அஞ்­சப்­ப­டு­வ­தாக ஒடிசா தீய­ணைப்­புத்­துறை தலை­வர் சுதான்ஷூ சாரங்கி தெரி­வித்­துள்­ளார்.

இவ்விபத்தை நேரில் பார்த்த பஹா­னாகா கிரா­ம­வா­சி­கள் கூறு­கை­யில், "இரு­ளில் எங்களால் எதை­யும் சரி­யாகப் பார்க்கமுடி­ய­வில்லை. பல­ரும் உதவி கேட்டு கதறினர். சிலர் ரயில் பெட்­டி­களுக்கு இடை­யில் சிக்­கி­யி­ருந்­த­னர். எங்கும் ரத்தம் சித­றிக் கிடந்­தது," என்று கூறி­யுள்­ள­னர்.

ஒடிசா ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள், பயணிகள் அதிர்ச்சித் தகவல்