கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் பற்றிய விவரங்கள்:
பீகாரில் 1981ல் நடந்த ரயில் விபத்து இந்தியாவின் ஆக மோச மான விபத்தாகக் கருதப்படுகிறது. பாக்மதி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த தில் 286 உடல்கள் மட்டும் மீட்கப் பட்டாலும் ஏறக்குறைய 800 பேர் வரை இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் 1995ல் பழுதாகி நின்றுகொண்டிருந்த விரைவு ரயில் மீது பின்னால் வந்த மற்றொரு விரைவு ரயில் மோதியதில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.
பஞ்சாப்பில் 1998ல் தடம்புரண்டு நின்ற ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்தில் 212 பேர் இறந்தனர்.
மேற்கு வங்காளத்தில் 1999ல் பிரம்மபுத்ரா ரயிலும் அசாம் விரைவு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் ஏறக்குறைய 300 பயணிகள் உயிரிழந்தனர்.
இப்போது 2023ல் ஒடிசாவில் நிகழ்ந்துள்ள இந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் 57 விழுக்காடு விபத்துகள் ஊழியர்களின் கவனக்குறைவால் நேரிட்டவை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

