விபத்து: நூலிழையில் உயிர்தப்பிய 110 பக்தர்கள்

விபத்து: நூலிழையில் உயிர்தப்பிய 110 பக்தர்கள்

1 mins read
b4862c04-7c23-4660-b6f5-65d43904f646
-

பாலேஸ்­வர்: ஒடிசா ரயில் விபத்­தில் பய­ணம் மேற்­கொண்ட கர்­நா­டக மாநி­லத்­தைச் சேர்ந்த நூற்­றுக்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் அதிர்ஷ்­ட­வ­ச­மாக நூலி­ழை­யில் உயிர்தப்பி உள்­ள­னர்.

விபத்­தில் சிக்­கிய பெங்­களூரு-ஹவுரா ரயி­லில் சிக்­ம­க­ளூரு, உத்­த­ர­கன்­னடா உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 110 பேர் ஜார்­கண்ட் மாநி­லத்­தில் உள்ள சம்­மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவி­லுக்கு ஆன்­மிக சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­ட­னர்.

கடந்த 31ஆம் தேதி, பெங்­களூரு பையப்­ப­ன­ஹள்­ளி­யில் உள்ள ரயில் நிலை­யத்­துக்கு வந்த அவர்­கள் நண்­ப­கல் 12.30 மணிக்கு ஹவுரா ரயி­லின் எஸ்5, எஸ்6, எஸ்7 ஆகிய மூன்று ரயில் பெட்­டி­களில் ஏறி பய­ணம் செய்­த­னர். இம்­மூன்று பெட்­டி­களும் ரயி­லின் கடைசி பகு­தி­யில் இருந்தன.

இந்­நி­லை­யில் அந்த ரயி­லின் இன்­ஜின் விசா­கப்­பட்­டி­னம் ரயில் நிலை­யத்­தில் மாற்­றம் செய்­யப்­பட்­ட­தால், அக்­கு­றிப்­பிட்ட மூன்று பெட்­டி­களும் முன்­ப­கு­திக்­குச் சென்­று­விட்­டன. அதன் பிறகு ரயில் விபத்­தில் சிக்­கி­ய­போது, கடைசிப் பகு­தி­யில் இருந்த பெட்­டி­கள்­தான் தடம் புரண்­டன. அவற்­றில் இருந்த பய­ணி­கள் உயி­ரி­ழக்க நேரிட்­டது.

கட­வுள் அரு­ளால் தாங்­கள் உயிர் பிழைத்­த­தாக 110 பக்­தர்­களும் நெகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­த­னர்.

இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்து தொடர்­பாக உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­க­றி­ஞர் விஷால் திவாரி என்­ப­வர் பொது­நல வழக்கு ஒன்றை தொடுத்­துள்­ளார்.

ரயில்வே துறை­யில் உள்ள பாது­காப்பு ஏற்­பா­டு­கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்­வு­பெற்ற உச்ச நீதி­மன்ற நீதி­பதி தலை­மை­யில் ஆணை­யம் அமைக்க வேண்­டும் என அவர் தமது மனுவில் வலி­யு­றுத்தி உள்­ளார்.