பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூரில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,717 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த அகுவானி-சுல்தங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது.
சீட்டுக்கட்டுப்போல் பாலம் சரிவதைக் கண்டு கங்கை கரையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இந்த தருணத்தைக் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.
பாகல்பூரில் இருந்து ககாரியா மாவட்டத்தை இணைக்கும் வகையில் மூன்று கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிப் பால மாக இது கட்டப்பட்டு வந்தது.
கடந்த 14 மாதங்களில் இரண் டாவது முறையாக ஞாயிறன்று மாலை பாலம் இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவம் நடந்தபோது பாலம் அருகே நின்றிருந்த பாது காவல் அதிகாரி ஒருவரைக் காணவில்லை என்றும் அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியூட்டும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுமானப் பணியின் தரம் குறித்து பொறியாளர்களின் அறிக்கை கிடைத்தவுடன் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பாலம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ்குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் பதவி விலக வேண்டும் என பீகார் மாநில பாஜக வலியுறுத்தி உள்ளது.
கட்டுமான ஊழலே பாலம் இடிவதற்குக் காரணம் என்று பீகார் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், “பாலத்தின் வடிவமைப்பில் தீவிர குறைபாடுகள் இருப்பதாக நிபுணா்கள் கூறியதையடுத்து, பாலத்தின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. நிபுணா் குழுவின் இறுதி அறிக்கை வந்ததும் பாலத்தைக் கட்ட ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.