நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணியில் ஜெர்மனி

1 mins read
3a67d7a6-631e-41c3-817f-82c57f0b2731
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் கடற்­ப­டை­யின் தேவை­யைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் ஆறு நீர்­மூழ்­கிக்­கப்­பல்­க­ளைக் கட்­டு­வ­தற்கு ஜெர்­ம­னி­யு­டன் இந்­தியா பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

ஜெர்­ம­னி­யின் தற்­காப்பு அமைச்­சர் போரிஸ் பிஸ்­டோ­ரி­யஸ் இரண்டு நாள்­கள் அதி­கா­ர­பூர்வ வருகை மேற்­கொண்டு நேற்று புது­டெல்லி வந்­து­சேர்ந்­தார். அவ­ருக்கு அங்கு ராணுவ அணி­வ­குப்பு மரி­யாதை அளிக்­கப்­பட்­டது. பின்­னர் இந்­திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங்கை சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.

கிட்­டத்­தட்ட US$5.2 மதிப்­புள்ள கப்­பல் கட்­டும் திட்­டத்தை ஜெர்­ம­னி­யின் திஸ்­ஸென்க்­ரூப் நிறு­வ­ன­மும் இந்­தி­யா­வின் மஸ­கோன் டாக் ஷிப்­பில்­டர்ஸ் லிமி­டெட் நிறு­வ­ன­மும் இணைந்து செயல்­ப­டுத்­தும் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று ஏஆர்டி தொலைக்­காட்­சிக்­குப் பேட்­டி­ய­ளித்த திரு பிஸ்­டோ­ரி­யஸ், "புதன்­கி­ழ­மை­யன்று மும்­பை­யில் நீர்­மூழ்­கிக் கப்­பல் கட்­டு­வ­தற்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டு­வது அன்­றைய நிகழ்ச்சி நிர­லில் உள்­ளது.

"தன்­னு­டன் வருகை தந்­துள்ள ஜெர்­மன் அதி­கா­ரி­க­ளுக்­கும் இந்­திய அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யே­யான பேச்­சு­வார்த்­தைக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தும் உத­வு­வ­துமே எனது பங்­காக இருக்­கும்," என்று கூறி­னார்.

"ஜெர்­ம­னி­யின் தொழிற்­துறை­க­ளுக்கு இந்த நீர்­மூழ்­கிக் கப்­பல் கட்­டும் ஒப்­பந்­தம் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது. இதன் மூலம் இரு­நா­டு­க­ளுக்கு இடை­யே­யான கொள்கை ரீதி­யி­லான பங்­கா­ளித்­து­வம் மேலும் வலு­வ­டைந்­துள்­ளது," என்று திரு போரிஸ் தெரி­வித்­துள்­ளார்.