மழைக்காக ரயிலின்கீழ் ஒதுங்கிய அறுவர் பலி

1 mins read
6d65bc3b-fecc-4138-9be1-d5b809549b4a
-

ஒடி­சா: ஒடிசாவின் சரக்கு ரயில் விபத்­தில் பலி­யான ஆறு தொழி­லா­ளர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக் குத் தலா ரூ.5 லட்­சம் நிவா­ர­ணம் அறி­ வித்து உத்­த­ர­விட்­டுள்­ளார் அம்­மா­நில முதல்­வர் நவீன் பட்­நா­யக்.

அத்துடன், காய­ம­டைந்­த இரு வருக்கு உய­ரிய சிகிச்சை அளிக்­க­வும் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இவ்விபத்து குறித்து உயர்­மட்ட விசா­ர­ணைக்கு உத்­த­ர­விடப் பட்­டுள்­ள­தாக ரயில்வே அதி­கா­ரி­கள் கூறி­னர். ஒடிசாவின் ஜஜ்பூா் பகுதியில் உள்ள ரயில் நிலை­யத்­தில் சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அப்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கனமழை பெய்ததால் சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியுள்ளனர். இயந்திரம் இணைக்­கப்­ப­டாத அந்த ரயில், காற்­றின் வேகத்­தில் நக­ரத் தொடங்­கி­யதில் ரயில் பெட்டிகள் சாய்ந்து ஆறு தொழி­லா­ளா்­கள் உயி­ரி­ழந்­தனா்.