மும்பை: 500 ரூபாய் நோட்டு களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் எண்ணமோ அல்லது ரூ.1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமோ இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் விவரித்த அவர், "நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
"திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 நோட்டு களில் 50 விழுக்காடு நோட்டுகள் வங்கிகளை வந்து சேர்ந்துள்ளன. இதுவரை ரூ1.80 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு அவசரப்பட வேண்டாம். ஆனால், செப்டம்பர் மாதத்தின் கடைசி நாள்கள் வரை காத்திருக்கவேண்டாம்," என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன் களுக்கான ரெப்போ வட்டி விகி தத்தில் மாற்றமில்லை என்பதால், வீட்டுக்கடன் மீதான வட்டியிலும் எந்த மாற்றமும் இல்லை என சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.

