வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: 'கொடுங்கனவு': என்கிறார் மல்யுத்த நடுவர்

2 mins read
e0a24b07-f232-45a5-b50b-6ede97549914
-

புது­டெல்லி: மல்­யுத்த வீராங்­க­னை­க­ளைப் பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­திய குற்­றச்­சாட்­டுக்கு ஆளாகி உள்ள இந்­திய மல்­யுத்த கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் பாஜக எம்­பி­யு­மான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்­யுத்த நடு­வர் ஒரு­வ­ரும் புகார் தெரி­வித்­துள்­ளார்.

அனைத்­து­லக மல்­யுத்த நடு­வ­ரான ஜக்­பீர் சிங் தெரி­வித்­துள்ள தக­வல்­கள் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. பிரிஜ் பூஷன் சரண் மீதான குற்­றச்­சாட்­டு­கள் உண்­மை­தான் என ஜக்­பீர் சிங் கூறி­யுள்­ளார். இத­னால் பிரிஜ் பூஷன் சர­ணுக்கு நெருக்­கடி அதி­க­ரித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக டெல்லி காவல்­து­றை­யி­டம் வாக்கு­மூ­லம் அளித்­துள்ள ஜக்­பீர் சிங், கடந்த காலங்­களில் மல்­யுத்த வீராங்­க­னை­க­ளி­டம் பிரிஜ் பூஷன் சிங், பல்­வேறு தரு­ணங்­களில் தகாத முறை­யில் நடந்து கொண்­டது உண்­மை­தான் என்று தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்தி ஒன்­றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"கடந்த 2022ஆம் ஆண்டு லக்னோ நக­ரில் ஆசிய அள­வி­லான மல்­யுத்த போட்­டி­யின்­போது, பயிற்சி ஆட்­டங்­கள் நடை­பெற்­றன. அப்­போது பிரிஜ் பூஷன் ஒரு வீராங்­க­னை­யி­டம் தகா­த­மு­றை­யில் நடந்து கொண்­டார்.

"புகைப்­ப­டம் ்எடுக்­கும் நிகழ்­வின்­போ­தும் ஒரு வீராங்­க­னை­யி­டம் அவர் அத்­து­மீ­றி­னார். அப்­போது அந்த வீராங்­கனை அவ­ரது கையைத் தட்­டி­விட்­டுச் சென்­றார். அந்­தப் பெண்­ணுக்கு விரும்­பத்­தகாத செயல் ஏதோ ஒன்று நடந்­துள்­ளது," என தனி­யார் தொலைக்­காட்­சிக்கு அளித்­துள்ள பேட்­டி­யில் ஜக்­பீர் சிங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், 2013ஆம் ஆண்டு தாய்­லாந்­தில் நடந்த போட்­டி­யின்­போது, தங்­கு­வி­டு­தி­யில் இளம் வீராங்­க­னை­களுக்கு பிரிஜ் பூஷ­னின் நண்­பர்­கள் சிலர் பாலி­யல் ரீதி­யில் தொல்லை கொடுத்­த­தா­க­வும் ஜக்­பீர் சிங் கூறியுள்ளார்.

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஆசிய விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிக்க வீரர் கள் முடிவு செய்துள்ளனர்.