ரயில் விபத்தின் எதிரொலியாக நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் 24 விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறியது.
பாஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ஒட்டுமொத்த கட்டமைப்பும் மாற்றப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஒடிசாவில் ஜூன் 2ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதி 288 போ் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற பாஹாநகா பஜாா் ரயில் நிலையத்தை சிபிஐ அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளதால் அங்கு ரயில்கள் நிற்காமல் செல்கின்றன.
இதற்கிடையே, விபத்து நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் இன்னும் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதில் சிரமங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பெரும்பாலான சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்துள்ளன. எனவே மரபணுச் சோதனை அறிக்கைக்காக 82 பேரின் உறவினர்களும் காத்திருக்கின்றனர்," என்று அந்த அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறினர்.

