ஆசிய விளையாட்டு புறக்கணிப்பு: மல்யுத்த வீரர்கள் எச்சரிக்கை

ஆசிய விளையாட்டு புறக்கணிப்பு: மல்யுத்த வீரர்கள் எச்சரிக்கை

2 mins read
b399f545-3ce7-401b-895d-abd92d4b6daf
-

சோனி­பட்: மல்­யுத்த வீராங்­கனை­க­ளின் பாலி­யல் புகா­ரில் சிக்­கி­யுள்ள மல்­யுத்த சம்­மே­ளன தலை­வர் பிரிஜ்­பூ­ஷன் சிங் மீது நீதிமன்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விட்­டால் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் பங்­கேற்­கப்போவ­தில்லை என்று மல்­யுத்த வீரர்­கள் எச்­ச­ரித்துள்­ள­னர்.

ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் வரும் செப்­டம்­பர் மாதம் சீனா­வில் நடை­பெற உள்­ளன. அதில் மல்­யுத்த வீரர்­கள் பங்­கேற்­கா­விட்­டால் இந்­திய அணிக்­குப் பெருத்த பின்­ன­டைவு ஏற்­படும். 2018ஆம் ஆண்டு நடை­பெற்ற ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் இந்­தி­யா­வின் பஜ்­ரங் பூனியா மற்­றும் வினேஷ் போகட் தங்­கப் பதக்­கம் வென்று சாதித்­த­னர்.

புகா­ரில் சிக்­கி­யுள்ள பிரிஜ்­பூஷன் சிங்குக்கு எதி­ராக வரும் வியா­ழக்­கி­ழ­மைக்­குள் (ஜூன்15) குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­படும் என மத்­திய அமைச்­சர் உறுதி அளித்­த­தால், மல்­யுத்த வீரர்­க­ளின் போராட்­டம் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ளது. உறுதி அளித்­த­படி குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­ப­டா­விட்­டால் போராட்­டத்தை தொட­ரப் போவ­தா­க­வும் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யைப் புறக்­க­ணிக்­கப்போவ­தா­க­வும் மல்­யுத்த வீராங்­கனை சாக்ஷி மாலிக் தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரத்­தில் திருப்­பு­மு­னை­யாக பிரிஜ்­பூ­ஷன் மீது புகார் அளித்த 18 வய­துக்­குட்பட்ட வீராங்­க­னை­யின் தந்தை, தாங்­கள் கொடுத்­தது பொய்ப் புகார் என பல்டி அடித்­துள்­ளார்.

இந்த நிலை­யில் அரி­யா­னா­வின் சோனி­பட்­டில் நடந்த மகா பஞ்­சா­யத்து நிகழ்ச்­சி­யில் சாக்ஷி மாலிக் உள்­ளிட்ட மல்­யுத்த வீரர்­கள் கலந்து கொண்­ட­னர்.

இதில் பேசிய சாக்ஷி மாலிக், மல்­யுத்த வீரர்­கள் மிரட்­டப்­ப­டு­வ­தா­க­வும் அத­னால்­தான் அந்த சிறு­மி­யின் தந்தை பல்டி அடித்­தி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

"பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பிரிக்க முயற்­சி­கள் நடக்­கின்­றன. இது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. பிரிவு 161 மற்­றும் 164ன் கீழ் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கு­மூ­லங்­கள் மாற்­றப்­பட்டுள்­ளன.

"நடப்­ப­வற்றை எங்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை," என குற்­றம் சாட்­டி­னார்.

லஞ்­சத்­தைப் பெற்­றுக்­கொண்டு போராட்­டத்தை முடிக்­கு­மாறு பஜ்­ரங் பூனி­யா­வுக்கு அழைப்­பு­கள் வரு­வ­தாக குற்­றம் சாட்­டிய சாக்ஷி மாலிக், இத­னால்­தான் பிரிஜ்­பூ­ஷனை முத­லில் கைது செய்­து­விட்டு விசா­ர­ணையை நடத்­து­மாறு கோரி வரு­கி­றோம் என்­றும் கூறி­னார்.