உயிரிழப்பை குறைத்த செயற்கை நுண்ணறிவு

1 mins read
0535c9c4-a203-434e-a809-a02d6975cfd8
-

திரு­வ­னந்­த­பு­ரம்: பாது­காப்­பான கேர­ளம்' என்ற திட்­டத்­தின்­கீழ் கேரள மாநி­லம் முழு­வ­தும் சாலை­களில் செயற்கை நுண்­ண­றிவு கேம­ராக்­கள் பொருத்­தப்­பட்டு, வாகன இயக்­கங்­க­ளின் கண்­கா­ணிப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டா்­பாக போக்­கு­வ­ரத்து அமைச்சா் ஆன்­டனி ராஜு தலை­மை­யில் சனிக்­கி­ழமை ஆய்­வுக் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "கேர­ளத்­தில் சரா­ச­ரி­யாக தின­சரி 12 சாலை விபத்து உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்டு வந்த நிலை­யில், செயற்கை நுண்­ண­றிவு கேம­ராக்­கள் செயல்­பாட்­டுக்கு வந்த பின்னா் உயி­ர­ழப்பு 5க்கும் 8க்கும் இடைப்­பட்ட எண்­ணிக்­கைக்­குக் குறைந்­துள்­ளது," என்­றார்.

செப்­டம்பா் 1ஆம் தேதி முதல் காா்களில் ஓட்­டுநா் மட்­டு­மின்றி, முன் இருக்­கை­யில் அமா்ந்­தி­ருக்­கும் பய­ணி­யும் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட உள்­ளது என்­றும் அவா் கூறினாா்.