மைசூரு: கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தின் கெஞ்சனகுடா ஹள்ளியைச் சோ்ந்த பைலூரு திப்பையா என்பவா், தமது மனைவி பகீரம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இத்தம்பதிக்கு 4 குழந்தைகள் இருந்த நிலையில், அதில் 3 குழந்தைகள் தனக்கு பிறந்ததல்ல என திப்பையா சண்டையிட்டு வந்தாா்.
பிரச்சினை முற்றியதில், 2017 பிப்ரவரி 25ஆம் தேதி தமது மனைவியை வெட்டிக் கொன்ற திப்பையா, மனைவியின் சகோதரி கங்கம்மா மற்றும் 10 வயதுக்கு உள்பட்ட தமது 3 குழந்தைகளையும் சரமாரியாக வெட்டிக் கொன்றாா்.
வழக்கை விசாரித்த பெல்லாரி அமா்வு நீதிமன்றம், திப்பையாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து 2019 டிசம்பா் 3ல் தீா்ப்பளித்தது.
இத்தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் திப்பையா மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கில் கடந்த நவம்பரில் விசாரணையை நிறைவு செய்த உயா்நீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், திப்பையாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
"மூன்று குழந்தைகள் உள்பட ஐவர் கொலை செய்யப்பட்ட குற்றத்தின் தீவிரம், கொடூரமான விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், குற்றவாளிக்கு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை," என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது.

