50,000 பேர் வெளியேற்றம்

50,000 பேர் வெளியேற்றம்

2 mins read
dca6b448-fded-4d16-8fcf-681e7b176607
-

கலவரத் தூண்டலை முறியடிக்க மணிப்பூரில் இணையச் சேவை தொடர்ந்து முடக்கம்

இம்­பால்: வட­கி­ழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரில் பெரும்­பான்மை மைதேயி சமூ­கத்­தி­னர் மற்­றும் குகி பழங்­கு­டி­யி­ன­ருக்கு இடையே கடந்த மாதத் தொடக்­கத்­தில் பெரும் கல­வ­ரம் மூண்­டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து வரு­கின்­றன.

கல­வ­ரம் அடங்­கா­த­தால், இணை­யச் சேவைக்­கான தடை மேலும் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டக் கூடிய புகைப்­ப­டங்­கள், காணொ­ளி­கள் மற்­றும் பேச்­சு­க­ளைப் பரப்ப சில சமூக விரோத சக்­தி­கள் சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது என்­ப­தால் இணை­யச் சேவைத் தடையை நாளை மறு­தி­னம் (ஜூன் 15) வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக மணிப்­பூர் அரசு தெரி­வித்து உள்­ளது.

இம்­மா­தம் 3ஆம் தேதி முதல் மணிப்­பூ­ரில் இணையச் சேவை நடை­பெ­ற­வில்லை.

இந்த நிலை­யில், மாநில தக­வல் மற்­றும் மக்­கள் தொடர்பு அமைச்சர் ஆர்.கே.ரஞ்­சன், இம்­பா­லில் நேற்று நிரு­பர்­க­ளுக்குப் பேட்டி அளித்­தார்.

"மாநி­லத்­தின் எல்லா மாவட்­டங்­க­ளி­லும், குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் ஆயு­தங்­க­ளைத் தேடும் பணி நடக்­கிறது. இந்­தத் தேடு­தல் வேட்­டை­யில் 53 ஆயு­தங்­களும் 39 வெடி­குண்­டு­களும் கைப்­பற்­றப்­பட்­டன. கல­வ­ரத்­தால் 50,698 பேர் வெளியேற்றப்பட்டு 349 நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்," என்று அவர் தெரி­வித்­தார்.

தொடர்ந்து மணிப்­பூர் அரசு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது. அந்த அறிக்­கை­யில், "அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை­வாசி உயர்­வைத் தடுக்க விலைக்­கட்­டுப்­பாட்டு வழி­முறை பின்­பற்­றப்­ப­டு­கிறது. மாநி­லத்­துக்கு தேசிய நெடுஞ்­சாலை 7 வழி­யாக பல்­வேறு பொருள்­கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. 35,000 டன் கட்­டு­மா­னப்­ பொ­ருள்­கள், எரி­பொ­ருள்­கள் மற்­றும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் 2,376 லாரி­களில் கொண்டு வரப்­பட்­டுள்­ளன," என கூறப்பட்டுள்ளது.