மத்தியப் பிரதேசத்தில் ஊழல், மோசடி, வேலையின்மை: பிரியங்கா பிரசாரம்

மத்தியப் பிரதேசத்தில் ஊழல், மோசடி, வேலையின்மை: பிரியங்கா பிரசாரம்

1 mins read
b6e46317-96e3-496d-96b6-eb9a44130cf5
-

ஜபல்­பூர்: மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் சிவ­ராஜ் சிங் சவு­கான் தலை­மை­யில் பார­திய ஜனதா கட்­சி­யின் ஆட்சி நடை­பெ­று­கிறது. இவ்­வாண்டு இறு­தி­யில் இந்த மாநில சட்­ட­மன்­றத்­துக்­குத் தேர்­தல் நடை­பெ­று­வ­தை­யொட்டி அர­சி­யல் கட்­சி­கள் இப்­போதே பிர­சா­ரத்­தைத் தொடங்கிவிட்­டன.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி (படம்) நேற்று ஜபல்­பூ­ரில் பிர­சா­ரத்­தைத் தொடங்­கி­னார்.

பிர­சா­ரக் கூட்­டத்­தில் அவர் பேசு­கை­யில், "மத்­தியப் பிர­தே­சத்­தில் சிவ­ராஜ் சிங் சவு­கான் அர­சாங்­கம் ஊழ­லில் மூழ்­கி­விட்­டது. வேலை­வாய்ப்பை வழங்­கத் தவ­றி­விட்­டது.

"கடந்த மூன்றாண்­டு­களில், பாஜக அர­சாங்­கத்­தால், மாநி­லத்­தில் 21 அரசு வேலை­கள் மட்­டுமே வழங்­கப்­பட்­டுள்­ளன. மாநி­லத்­தில் பார­திய ஜனதா ஆட்­சி­யின் 220 மாத ஆட்­சி­யில் 225 மோச­டி­கள் நடந்­துள்­ளன. இந்த எண்­ணிக்கை எனது கவ­னத்­திற்­குக் கொண்டு வரப்­பட்­ட­போது, எனது அலு­வ­ல­கத்­தில் இதனை 3 முறை சரிபார்த்­த­ பிறகு, இது உண்­மை­தான் என கண்­ட­றிந்­தேன்.

"இமாச்­சலப் பிரதேசம் மற்­றும் கர்­நா­டகா மக்­கள் தேர்­த­லில் பாஜ­க­விற்கு தகுந்த பதி­லடி கொடுத்­துள்­ள­னர்," என்று பிரி­யங்கா காந்தி பேசி­னார்.

மத்­தி­யப் பிர­தே­சத்­தில் கமல்­நாத் தலை­மை­யில் காங்­கி­ரஸ் ஆட்சி நடை­பெற்று வந்த வேளை­யில் 2020 மார்ச் மாதம் ஜோதி­ராதித்ய சிந்­தியா தலை­மை­யில் எம்­எல்­ஏக்­கள் சிலர் வெளி­யே­றி­னர். அத­னைத் தொடர்ந்து பாஜக ஆட்­சிக்கு வந்­தது. சிவ­ராஜ் சிங் சவு­கான் மீண்­டும் முதல்­வர் ஆனார்.