உயர்நிலைப் படிப்பை கைவிடுவது 7 மாநிலங்களில் அதிகரிப்பு

உயர்நிலைப் படிப்பை கைவிடுவது 7 மாநிலங்களில் அதிகரிப்பு

1 mins read
d76d4775-ba00-4e3a-912e-40f57478779c
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் உயர்­நி­லைப் பள்­ளிப் படிப்பைப் பாதி­யி­லேயே கைவி­டும் போக்கு அதி­கரித்து வரு­வ­தாக தெரிய வந்­துள்­ளது.

மத்­திய கல்வி அமைச்­ச­கத்­தின் திட்ட ஒப்­பு­தல் வாரிய கூட்ட நட­வ­டிக்கை குறிப்­பு­களில் இருந்து இந்­தத் தக­வல் தெரிய வந்­துள்­ளது.

2021-22 கல்வி ஆண்­டில் உயர்­நி­லைப்­பள்ளி அள­வில் பள்­ளிப் படிப்பைப் பாதி­யில் கைவி­டு­வது பீகார் மாநி­லத்­தில் 20.46 விழுக்­கா­டா­க­வும் குஜ­ராத்­தில் 17.85 விழுக்­கா­டா­க­வும் அதி­க­ரித்­துள்­ளது.

அதற்கு அடுத்த நிலை­யில் அசா­மில் 20.3 விழுக்­காடு, ஆந்­தி­ரா­வில் 16.7 விழுக்­காடு, பஞ்­சா­ப்பில் 17.2 விழுக்­காடு, மேகா­ல­யா­வில் 21.7 விழுக்­காடு, கர்­நா­ட­கத்­தில் 14.6 விழுக்­காடு அதி­க­ரித்து உள்­ளதை நட­வ­டிக்­கைக் குறிப்­பு­கள் காட்­டின.

இந்த ஏழு மாநி­லங்­களில் மாண­வர்­கள் இடை­யி­லேயே படிப்பைக் கைவி­டு­வது தேசிய சரா­ச­ரி­யான 12.6 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் அதி­கம் ஆகும்.

தென்­னிந்­திய மாநி­லங்­களில் ஆந்­திரா, கர்­நா­டக மாநி­லங்­களில் மட்­டுமே உயர்­நி­லைப் படிப்­பைக் கைவி­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

தமிழ்­நாடு, கேரளா போன்ற மாநி­லங்­களில் அந்­தப் போக்கு குறைவு என­வும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.