டெல்லியில் இனி சர்வாதிகாரமே: கெஜ்ரிவால்

1 mins read
388bf462-37b4-4e6f-8019-fa194f21c885
-

புது­டெல்லி: டெல்­லி­யில் அதி­கா­ரி­களை நிய­ம­னம் மற்­றும் இட­மாற்­றம் செய்­யும் அதி­கா­ரம் மாநில அர­சுக்­குத்­தான் உண்டு என உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்து இருந்தது.

அந்தத் தீர்ப்பை செல்­லு­ப­டி­யா­காத வகை­யில் அவ­ச­ரச் சட்­டம் ஒன்றை மத்­திய அரசு கொண்டு வந்­துள்­ளது.

வரு­கிற நாடா­ளு­மன்ற கூட்­டத்­தொ­ட­ரில், இதற்­கான மசோ­தாவை நிறை­வேற்றி சட்­ட­மாக்க மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

எனவே, நாடா­ளு­மன்­றத்­தில் அந்த மசோ­தாவை ஆத­ரிக்க வேண்­டாம் என்று டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், எதிர்க்­கட்சித் தலை­வர்­க­ளைச் சந்­தித்து ஆத­ரவு திரட்டி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், இந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி, டெல்லி ராம­லீலா மைதா­னத்­தில் ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்­தி­னம் பிரம்­மாண்ட பொதுக்­கூட்­டம் நடத்­தி­யது.

அந்­தக் கூட்­டத்­தில் பேசிய கெஜ்­ரி­வால், "அவ­ச­ரச் சட்­டம் மூலம் பிர­த­மர் மோடி­யின் முதல் தாக்­கு­தல் டெல்­லி­யில் நடந்­துள்­ளது.

"டெல்­லி­யில் இனி சர்­வா­தி­கார ஆட்­சி­தான். ஆளு­நர்­தான் உச்­ச­பட்ச அதி­கா­ரம் படைத்­த­வர். தேர்­த­லில் மக்­கள் யாருக்கு வேண்­டு­மா­னா­லும் வாக்­க­ளிக்­க­லாம். ஆனால் மத்­திய அர­சு­தான் டெல்­லியை ஆட்சி செய்­யும் என அச்­சட்­டம் கூறு­கிறது. இதை எதிர்க்­கா­விட்­டால், ராஜஸ்­தான், பஞ்­சாப் போன்ற பிற மாநி­லங்­க­ளி­லும் இத்­த­கைய அவ­ச­ரச் சட்­டத்தைக் கொண்­டு­வந்து விடு­வார்­கள்," என்றார் கெஜ்ரிவால்.