18 பாஜக மேலவை எம்பிக்களை கீழவை உறுப்பினராக்க திட்டம்

18 பாஜக மேலவை எம்பிக்களை கீழவை உறுப்பினராக்க திட்டம்

1 mins read
98a84c3c-db17-4f4b-bedc-eb774d76b080
-

புது­டெல்லி: இந்­திய நாடா­ளு­மன்றத் தேர்­தல் அடுத்த ஆண்டில் நடக்க உள்­ளது.

அடுத்த ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லில் 10 மத்­திய அமைச்­சர்­கள் உள்­பட 18 மேலவை உறுப்­பி­னர்­களை நேர­டி­யாக போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்­துள்­ள­தாகத் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், அமைச்­சர்­கள் பியூஷ் கோயல், பூபேந்­திர யாதவ், தர்­மேந்­திர பிர­தான், மன்­சுக் மாண்­ட­வியா, ஹர்­தீப் பூரி, ஜெய்­சங்­கர், புரு­ஷோத்­தம் ரூபாலா உள்­ளிட்ட பல பெயர்­கள் அடி­படு­கின்­றன.

ஜெய்­சங்­கர் புது­டெல்லி தொகு­தி­யி­லும் அமைச்சர் நிர்மலா சீதா­ரா­மன் மதுரை தொகு­தி­யிலும் போட்­டி­யிட வாய்ப்­புள்­ள­தா­க­வும் கட்­சித் தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.