இம்பால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்மீண்டும் கலவரம் வெடித்து 11 பேர் உயிரிழந்ததை அடுத்து பணிக்குத் திரும்பும்படி விடுப்பில் இருக்கும் காவல்துறையின ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடந்த தாக்குதலில் குறைந்தது 11 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காயமடைந்த பலர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவித்தன.

