புதிய அணு மின்சக்தி ஆலைகள்: மாநில அரசுகளுக்கு கோரிக்கை

புதிய அணு மின்சக்தி ஆலைகள்: மாநில அரசுகளுக்கு கோரிக்கை

1 mins read
4942fc3e-355a-475f-8ee8-fb0bf62a275b
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஏழு அணு மின்­சக்தி ஆலை­கள் செயல்­பட உள்ள பகு­தி­களில் பேரி­டர் தவிர்ப்புத் திட்­டங்­களை ஆயத்­தப்­ப­டுத்­து­மாறு மாநில அரசுகளை உள்­துறை அமைச்­சர் அமித் ஷா வலி­யு­றுத்­தி­னார்.

தேசிய பேரி­டர் மேலாண்மை ஆணை­யத்­து­டன் சேர்ந்து வழி­காட்டித் திட்­டத்தை உரு­வாக்கு­மாறு அவர் மாநி­லங்­க­ளைக் கேட்­டுக்கொண்­டார்.

அமைச்­சர் அமித் ஷா தலைமை­யில் பேரி­டர் மேலாண்மை தொடர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டம் புது­டெல்­லி­யில் செவ்­வாய்க்­கி­ழமை நடந்­தது.

அதில் பேசிய அமைச்­சர், மாநி­லங்­கள் பேரி­டர் மேலாண்­மைத் திட்­டங்­க­ளைத் தயா­ரிக்க உத­வி­யாக மத்­திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கி இருப்­ப­தா­கக் கூறி­னார். இந்த நிதி மூன்று முக்­கிய திட்­டங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­ப­டு­வதாக அவர் குறிப்­பிட்­டார்.

மாநி­லங்­க­ளின் தீய­ணைப்­புத் துறை­யின் சேவை­களை விரிவு­படுத்­த­வும் நவீ­னப்­ப­டுத்­த­வும் ரூ.5,000 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. சென்னை, மும்பை, கோல்­கத்தா, பெங்­க­ளூரு, ஹைத­ரா­பாத், அக­ம­தா­பாத் மற்­றும் புனே ஆகிய பெரு­ந­க­ரங்­களில் வெள்ள அபா­யத்­தைக் குறைக்க ரூ.2,500 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

நிலச்­ச­ரிவு ஏற்­ப­டா­மல் தடுக்க 17 மாநி­லங்­கள் யூனி­யன் பிர­தே­சங்­களில் ரூ.825 கோடி மதிப்­பீட்­டில் தேசிய நிலச்­ச­ரிவு அபா­யக் குறைப்­புத் திட்­டம் திட்­ட­மி­டப்­பட்டுள்­ள­தாக அமைச்­சர் மேலும் கூறி­னார்.

ஏழு அணு­மின் நிலை­யங்­கள் கட்­டப்­படும் மாநி­லங்­க­ளைப் பார்வை­யிட்ட தேசிய பேரி­டர் மேலாண்மை ஆணைய அதி­காரி­கள் அந்த இடங்­களில் பேரி­டர் சம்­ப­வங்­க­ளைத் தடுக்க கடு­மை­யான விதி­மு­றை­களைப் பின்­பற்­ற­வேண்­டும் என பரிந்­து­ரைத்­துள்ளதை அவர் சுட்­டி­னார்.