திருப்பதி: தெலுங்கானா மாநில தொழிலாளர் நல அமைச்சர் மல்லா ரெட்டி. இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மகபூப் நகருக்குச் சென்றார். அவருடன் கலால் துறை அமைச்சர் சீனிவாஸ் உடன் சென்றார்.
அமைச்சர்களை வரவேற்க பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
அமைச்சர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்களை ஒரு நாற்காலியில் அமர வைத்து பொதுமக்கள் வரிசையாக வந்து பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிவித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
"அமைச்சர் மல்லா ரெட்டி எங்கள் பகுதியில் பல்வேறு நல்ல பணிகளைச் செய்து வருகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலாபிஷேகம் செய்தோம்," என்று மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அபிஷேகத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் வேறு உடையில் வந்தனர். விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் மல்லா ரெட்டி திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார். பொதுமக்களும் சேர்ந்து ஆடி அமைச்சருக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

