திருப்பதி: ஆந்திர மாநிலம் நந்தியால் நகரப்பகுதியில் எட்டு மாத சினைப் பசு ஒன்று நடக்க முடியாமல், சாணம், கோமியம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதை அடுத்து மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சினைப் பசுவை இயந்திர வாகனம் மூலம் மீட்டு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பசுவின் வயிற்றில் இருந்து 60 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
பசுவின் வயிற்றில் இருந்த கன்று, இயற்கையான உணவு கிடைக்காததால் இறந்து இருந்தது. தொடர்ந்து பசுவும் பலியானது. உணவுப்பொருளோடு பிளாஸ்டிக் பொருள்களையும் பசு சாப்பிட்டதாகத் தெரியவந்தது.

