தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு புகாரில் ஆதாரமில்லை

1 mins read
af433e0b-fb50-4858-9849-eb98435a02cc
-

புது­டெல்லி: இந்­திய மல்­யுத்த கூட்­ட­மைப்புத் தலை­வ­ரும் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிரிஜ்­பூ­ஷண் சரண்­சிங் மீது ஏழு மல்­யுத்த வீராங்­க­னை­கள் பாலி­யல் புகார் தெரி­வித்­த­னர்.

அவர்­களில் சட்­டப்­ப­டி­யான வயதை எட்­டாத ஒரு­வ­ரும் அடங்­கு­வார். அந்­தப் பதின்ம வயது சிறுமி தாக்­கல் செய்த புகா­ரில் போது­மான ஆதா­ரம் இல்லை என்று நேற்று புது­டெல்லி காவல்­துறை தாக்­கல் செய்த அறிக்கை தெரி­வித்தது.

ஆகை­யால், பிரிஜ்­பூ­ஷ­ணுக்கு எதி­ரான முதல் தக­வல் அறிக்­கையை ரத்து செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த வழக்­கின் அடுத்த கட்ட விசா­ரணை ஜூலை 4ஆம் தேதி நடக்­கும்.