கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஜூலை 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கியது.
அது முதலே பல மாவட்டங்களில் வன்முறை நடந்தது. வெடிகுண்டு வீசிய சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்தத் தேர்தலையொட்டி திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் இடைவிடாமல் தீவிர பிர சாரம் செய்து வருகின்றனர்.

