தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குஜராத் கடலோரப் பகுதிகளில் பலத்த புயல்காற்று

2 mins read
8bd7b0e8-a902-4e5f-b0a3-9650d60b19c3
-

புது­டெல்லி: அர­பிக்­க­ட­லில் உருவான பிபர்­ஜாய் புயல், குஜ­ராத்­தின் சவு­ராஷ்­டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்­தானை ஒட்­டிய கடற்­கரைப் பகு­தி­களில் நேற்று தாம­த­மாக இர­வில் கரை­யைக் கடக்க இருந்­தது.

என்­றா­லும் முன்­ன­தா­கவே நேற்று மாலை­யில் குஜ­ராத் கடற்­க­ரைப் பகுதி­களில் பலத்த காற்று வீசி­யது. பேய் மழை பெய்­தது. கரை­யைக் கடக்­கும்­போது மணிக்கு 150 கி.மீ. வேகத்­தில் காற்று வீசும் என்று முன்­ன­தாக எச்­ச­ரிக்­கப்­பட்டு இருந்­தது.

புயல் நேற்று மாலை கரை யைக் கடக்­கும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் புயல் கரை­யேற தாம­தம் அடை­ய­லாம் என்று நேற்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

மத்­திய, மாநில அர­சு­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் அனைத்­தை­யும் எடுத்து இருந்­தன.

பிர­த­மர் மோடி தலை­மை­யில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­க­ளைக் குறித்து தீவி­ர­மான ஆலோ­ச­னை­கள் இடம்­பெற்­றன. அத­னை­ய­டுத்து புயல் பாதிப்புக்கு உள்­ளா­கக்­கூ­டிய பகுதி­களில் இருந்து சுமார் 100,000 பேர் பாது­காப்­பாக வேறு இடங்­களுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டனர்.

தேசிய மாநில மீட்­புக் குழு­வி­ன­ரோடு ராணு­வ­மும் வர­வழைக்­கப்­பட்டு தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்டு இருந்­தன.

பய­ணி­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்­யும் வகை­யில் ரயில்வே நிர்­வா­கம் குறிப்­பிட்ட ரயில் சேவை­களை முன்­ன­தாக நிறுத்­தி­விட்­டது. பிபர்­ஜாய் என்­றால் வங்­காள மொழி­யில் பேரி­டர் என்று பொருள்.

குஜ­ராத்­துக்­கும் பாகிஸ்­தா­னின் கராச்சி நக­ருக்­கும் இடைப்­பட்ட 325 கி.மீ. கட­லோ­ரப் பகு­தியை புயல் தாக்­கும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் முன்­ன­தாக கணித்து இருந்­தது.

அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட மக்­களில் 1,000 கர்ப்­பி­ணி­களும் 9,000 பிள்­ளை­களும் அடங்­கு­வர். புயல் வீசு­வ­தற்கு முன்­ன­தா­கவே கர்ப்­பி­ணி­களில் 300 பேருக்கு பிர­ச­வம் நிகழ்ந்­த­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.