இம்பால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வன்முறை ஒடுங்கியதாகத் தெரியவில்லை.
பாஜக ஆட்சி நடக்கும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் 3ஆம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டது.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் முழுவதும் ராணுவம், அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நீடிக்கின்றன.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் சாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூக பெண் அமைச்சரான நேம்சா கிப்ஜென் என்பவரின் வீட்டுக்கு யாரோ இரவு நேரத்தில் தீ வைத்துவிட்டனர்.
முன்னதாக நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் மாண்டனர். மணிப்பூர் வன் செயலில் மாண்டோர் எண்ணிக்கை 115 ஆகக் கூடியது.

